×

செக்ஸ் அரட்டைக்கு வராவிட்டால் ஆபாச படம் வெளியிடுவேன் ! 21 வயது பெண்ணை மிரட்டிய 6ம் வகுப்பு மாணவன் !! உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி !!!

உத்தர பிரதேசத்தில் “செக்ஸ் அரட்டையில்”ஈடுபடாவிட்டால் படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக 21 வயது பெண்ணை 6ம் வகுப்பு மாணவன் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் 21 வயதான ஒரு பெண் 6 ஆம் வகுப்பு மாணவனால் துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அந்த பெண் அவனுடன் “செக்ஸ் அரட்டையில்” ஈடுபடாவிட்டால் அல்லது பணம் கொடுக்கவிட்டால் அவளது படதை மார்பிங் செய்து இணையதத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளான். காவி நகர் காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.
 

உத்தர பிரதேசத்தில் “செக்ஸ் அரட்டையில்”ஈடுபடாவிட்டால் படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக 21 வயது பெண்ணை 6ம் வகுப்பு மாணவன் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் 21 வயதான ஒரு பெண் 6 ஆம் வகுப்பு மாணவனால் துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அந்த பெண் அவனுடன் “செக்ஸ் அரட்டையில்” ஈடுபடாவிட்டால் அல்லது பணம் கொடுக்கவிட்டால் அவளது படதை மார்பிங் செய்து இணையதத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளான்.
காவி நகர் காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் வைத்திருந்த டெலிகிராம் குழுவில் இருந்துள்ளார். அந்த குழுவில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை எடுத்த துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், பி.எஸ்.சி பட்டம் பெற்றவர், சிவில் சர்வீசஸ் ஆர்வலர். மாணவனால் அனுப்பப்பட்ட செய்திகளின் 18 ஸ்கிரீன் ஷாட்களை அவர் போலீசில் சமர்ப்பித்துள்ளார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மொபைல் தொலைபேசியை யாரோ ஹேக் செய்ததாகவும், அவருக்கு செய்திகளைப் பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மே 7 ஆம் தேதி முதல் முறையாக அந்தப் பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். நாளடைவில் நட்பு ரீதியாக இருவரும் செய்திகள் பகிர்ந்து கொண்டிருந்துள்ளனர். ஆனால் மே 17 ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில், அவர் அந்தப் பெண்ணின் சில மோசமான புகைப்படங்களை அனுப்பி அந்த மாணவன் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன பெண் செல்போனை பயன்படுத்தவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், முழு விஷயத்தையும் தனது பெற்றோரிடம் விவரித்தார். பின்னர் பிரச்சனை போலீ வசம் சென்றது.