×

‘சிறுநீர் குடிக்கச் சொல்லி’ 65 வயதான முதியவர் துன்புறுத்தல்: உ.பியில் தொடரும் கொடூரம்!

உ.பியில் புகாரை வாபஸ் பெறுவதற்காக 65 வயதான முதியவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லாலிட்புர் ரோடா என்னும் கிராமத்தில் வசித்து வரும் 65 வயதான முதியவரை, அப்பகுதியை சேர்ந்த நபர் ஒரு கோப்பையில் சிறுநீர் வைத்து அதனை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு முதியவர் மறுப்பு தெரிவித்ததால், அவரை சரமரியாக அந்த நபர் தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த முதியவரின் மகனையும், கோடாரியால் பலமாக அடித்திருக்கிறார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முதியவரும்
 

உ.பியில் புகாரை வாபஸ் பெறுவதற்காக 65 வயதான முதியவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லாலிட்புர் ரோடா என்னும் கிராமத்தில் வசித்து வரும் 65 வயதான முதியவரை, அப்பகுதியை சேர்ந்த நபர் ஒரு கோப்பையில் சிறுநீர் வைத்து அதனை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு முதியவர் மறுப்பு தெரிவித்ததால், அவரை சரமரியாக அந்த நபர் தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த முதியவரின் மகனையும், கோடாரியால் பலமாக அடித்திருக்கிறார்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முதியவரும் அவரது மகனும் காவல் நிலையத்துக்கு சென்று அந்த நபர் மீது புகார் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட முதியவர் கடந்த வாரம் அந்த நபர் மீது புகார் அளித்ததாகவும் அந்த புகாரை வாபஸ் பெறக்கோரி அந்த நபர் தாக்கியதாகவும் காயப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார்.

தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த முதியவர் இவ்வாறு கொடூரமாக துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. ஏற்கனவே உ.பியில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடூரம் தொடர்ந்து அரங்கேறி வரும் சூழலில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேல் சாதி என சொல்லிக்கொள்ளும் நபர்களின் ஆதிக்கம் எல்லை மீறி சென்று கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முதியவர் துன்புறுத்தப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய சிலரை தேடி வருவதாகவும் லாலித்புர் எஸ்.பி தெரிவித்துள்ளார்.