×

குடித்து விட்டு வந்த நபர் -துடித்து இறந்த பாட்டி -62 வயதான மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை

62 வயதான மூதாட்டியை ஒரு குடிகாரர் கெடுத்து ,கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார் .டெல்லியில் வசிக்கும் 62 வயதான பெண் பீகாரில் உள்ள பெகுசராய் பகுதியைச் சேர்ந்தவர். அவரது மகன் மற்றும் பேரனுடன் டெல்லியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார் .அவர் தன்னுடைய வீட்டிற்கு அருகில் காய்கறிகளை விற்பனை செய்வது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அவர் தனது பேரனுடன் சேர்ந்து காய்கறி விற்ற பின்னர் உணவு சமைக்க வீட்டிற்கு திரும்பினார்.அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு
 


62 வயதான மூதாட்டியை ஒரு குடிகாரர் கெடுத்து ,கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார்

.
டெல்லியில் வசிக்கும் 62 வயதான பெண் பீகாரில் உள்ள பெகுசராய் பகுதியைச் சேர்ந்தவர். அவரது மகன் மற்றும் பேரனுடன் டெல்லியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார் .
அவர் தன்னுடைய வீட்டிற்கு அருகில் காய்கறிகளை விற்பனை செய்வது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அவர் தனது பேரனுடன் சேர்ந்து காய்கறி விற்ற பின்னர் உணவு சமைக்க வீட்டிற்கு திரும்பினார்.அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு 30வயதான நபர் நன்றாக குடித்து விட்டு அந்த வீட்டிற்குள் நுழைந்தார் .அப்போது அந்த பெண் தனியாக இருப்பதை பார்த்து அவரை தாக்கி ,கீழே தள்ளினார் .அதன் பிறகு அவரை பாலியல் பலாத்காரம் செய்தார் .அதன் பிறகு தன்னிடமிருந்த ஒரு கத்தியை எடுத்து, அவரின் கழுத்தை வெட்டி தள்ளினார் .பிறகு அவரின் உடல் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி காயப்படுத்தினார் .இந்த கடுமையான தாக்குதலின் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார் .அந்த இடத்திலே அவரின் உயிர் போனது.
அதன் பிறகு அந்த இடத்திலிருந்து அந்த கொலைகாரர் யாரும் பார்க்காதவாறு தப்பியோடிவிட்டார் .
பின்னர் அந்த இடத்திற்கு வந்த பாதுகாப்பு துறையில் பணியாற்றும் அவரின் மகன், வீட்டில் தன்னுடைய தாயார் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார் .பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பென்னின் உடலை கைர்ப்ற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .அதன் ஓரு இந்த கொலையினை செய்த குற்றவாளியை வலைவீசி கண்டுபிடித்து கைது செய்தனர்