×

“ஐம்பது வயசிலே அழகிய தேடி அலையறியே” -திட்டிய மகனுக்கு நேர்ந்த கதியை பாருங்க

பிள்ளையாலும் ,மனைவியாலும் கைவிடப்பட்ட ஒரு தந்தை தனக்கு இன்னொரு பெண்ணை மண முடிக்க முற்ப்பட்டதை தட்டி கேட்ட மகன் மற்றும் மனைவியை கடித்து காயப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது அகமதாபாத்தின் தரியாபூர் பகுதியில் நயீமுதீன் என்ற 50 வயது நபர் தன்னுடைய 25 வயது மகன் யஹ்யாவுடனும் 45 வயது மனைவி ஜூபெதபனோவினோடும் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் அந்த கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் ஒரே வீட்டில் நயீமுதீன் மாடி பகுதியிலும் ,அந்த மனைவி தன்னுடைய
 

பிள்ளையாலும் ,மனைவியாலும் கைவிடப்பட்ட ஒரு தந்தை தனக்கு இன்னொரு பெண்ணை மண முடிக்க முற்ப்பட்டதை தட்டி கேட்ட மகன் மற்றும் மனைவியை கடித்து காயப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது

அகமதாபாத்தின் தரியாபூர் பகுதியில் நயீமுதீன் என்ற 50 வயது நபர் தன்னுடைய 25 வயது மகன் யஹ்யாவுடனும் 45 வயது மனைவி ஜூபெதபனோவினோடும் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் அந்த கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் ஒரே வீட்டில் நயீமுதீன் மாடி பகுதியிலும் ,அந்த மனைவி தன்னுடைய மகனோடு தரை தளத்திலும் தனித்தனியே மூன்றாண்டுகளாக வாழ்ந்து வந்தார்கள்
ஒரே வீட்டில் வசித்தாலும் கடந்த மூன்றாண்டுகளாக அவர்களுக்குள் பேச்சுவார்த்தையில்லாமல் இருந்துள்ளது .இதனால் அவரின் தந்தை தனிமையில் தவித்தார் ,அதனால் அவர் இன்னொரு பெண்ணை தனக்கு மணமுடித்துக்கொள்ள விரும்பி வரன் தேடும் வேளையில் இறங்கினார் .
இதை கேள்விப்பட்ட மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்க்கும் அவரின் மகன் தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டால் தங்களின் சொத்துக்கள் பறிபோய்விடுமே என்ற பயத்தில் தந்தையிடம் சென்று சண்டை போட்டுள்ளார் .அப்போது அவர் ‘இந்த வயதில் உனக்கு இன்னொரு பெண் கேட்குதா’ என்று தரக்குறைவாக பேசியுள்ளார் .இதனால் கோபமுற்ற அவரின் தந்தை அங்கேயே அவரின் மகனை முகம், கை .கால் ,கழுத்து போன்ற பகுதிகளில் கடித்து காயப்படுத்தியுள்ளார் .அப்போது மகனின் அலறல் சத்தம் கேட்ட அவரின் தாய் ஓடி வந்து தடுக்க முற்ப்பட்டபோது அவரையும் அவர் கடித்து காயப்படுத்தியுள்ளார் .அதனால் தாயும் மகனும் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள் ,அப்போது அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்தார்கள் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கக்ள் .