×

“ஏண்டி என்ன விட்டுட்டு இன்னொருத்தன் கூட சுத்தறியா?”-கள்ளக்காதலியின் மகளை கழுத்தை அறுத்து கொன்ற காதலன்.

தன்னுடைய காதலி வேறொருவருடன் பழகியதை பொறுத்துக்கொள்ளாத அவரின் காதலன், காதலியின் ஐந்து வயது மகளை கொலை செய்து, தன்னையும் காயப்படுத்திக்கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது . ஹைதராபாத்தின் கட்கேசரில் உள்ள இஸ்மாயில் கான் குடா பகுதியில் கருணாகர் என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்தார் .அவருக்கு ஒரு கள்ள காதலி இருந்துள்ளார் அவரும் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார் . அவரின் கள்ள காதலிக்கு கல்யாணமாகி 5 வயதில் ஒரு மகளிருக்கிறார்.இந்நிலையில் அவரின் கள்ள காதலி
 

தன்னுடைய காதலி வேறொருவருடன் பழகியதை பொறுத்துக்கொள்ளாத அவரின் காதலன், காதலியின் ஐந்து வயது மகளை கொலை செய்து, தன்னையும் காயப்படுத்திக்கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது .
ஹைதராபாத்தின் கட்கேசரில் உள்ள இஸ்மாயில் கான் குடா பகுதியில் கருணாகர் என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்தார் .அவருக்கு ஒரு கள்ள காதலி இருந்துள்ளார் அவரும் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார் . அவரின் கள்ள காதலிக்கு கல்யாணமாகி 5 வயதில் ஒரு மகளிருக்கிறார்.இந்நிலையில் அவரின் கள்ள காதலி கருணாகரை புறக்கணித்துவிட்டு வேறொரு நபருடன் பழகியிருக்கிறார் .

இதனால் கடுப்பான கருணாகர் வியாழக்கிழமை பிற்பகல் அவரின் காதலியிருக்கும் வீட்டிற்க்கு சென்று அவரை தாக்க முயன்றார் .அவர் தாக்குவதை கண்டு பயந்த அவரின் காதலி ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார் .அப்போது வெளியே இருந்த அவரின் ஐந்து வயது மகளை ஒரு ப்ளேடு கொண்டு கருணாகர் அவரின் கழுத்தை அறுத்துள்ளார் .இந்த தாக்குதலில் காயமடைந்த அவரின் மகள் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார் .

உடனே கருணாகர் தன்னையும் காயப்படுத்திக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார் . மகள் காயமுற்று மயங்கியிருப்பதனை கண்ட அவரின் தாய் அக்கம்பக்கத்தினர் உதவியோடு மகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் .அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் தீவிர சிகிச்சையளித்தும் மகள் இறந்து விட்டதாக கூறியதும் அவரின் தாய் அங்கேயே மயக்கமுற்றார் .இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ,போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.