×

4 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்: ராணுவ வீரர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. சென்னை: 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்ட வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் ராஜேந்திரன் 4 வயது மகளை குழந்தையின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி
 

முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.

சென்னை: 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்ட  வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல்  ராஜேந்திரன் 4 வயது மகளை  குழந்தையின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி ராஜம்மாளும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து அவர்கள்  இருவர் மீதும்  போக்சோ பிரிவிலும், கொலை தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.   

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் அடிப்படையில் சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

முன்னதாக  வழக்கை வாபஸ் வாங்க கூறி மீனாட்சி சுந்தரத்தின் மகன்  மிரட்டுவதாகச்  சிறுமியின் தந்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.