×

“பார்ட் பார்ட்டா படம் புடிச்சி பணம் கறக்குறானே ” -ஹோட்டல் மேனேஜரிடம் 33லட்சம் ஏமாந்த பெண்

37 வயதான பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றியும் ,உல்லாச வீடியோவை காமித்து மிரட்டியும் 33 லட்சம் ஆட்டைய போட்ட ஒரு ஹோட்டல் மேனேஜரை போலீசார் கைது செய்தனர் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு 37 வயதான பெண் தண்டோலியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு 2017ம் ஆண்டில் ஒரு நேர்காணலுக்காக சென்றார் .அப்போது அந்த ஹோட்டலில் மேனேஜராக வேலை செய்யும் பங்கஜ் பாட்டில் என்பவர் அந்த பெண்ணிடம் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி
 


37 வயதான பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றியும் ,உல்லாச வீடியோவை காமித்து மிரட்டியும் 33 லட்சம் ஆட்டைய போட்ட ஒரு ஹோட்டல் மேனேஜரை போலீசார் கைது செய்தனர்


மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு 37 வயதான பெண் தண்டோலியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு 2017ம் ஆண்டில் ஒரு நேர்காணலுக்காக சென்றார் .அப்போது அந்த ஹோட்டலில் மேனேஜராக வேலை செய்யும் பங்கஜ் பாட்டில் என்பவர் அந்த பெண்ணிடம் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார் .
அவர் ஏற்கனவே கல்யாணமானவர் என்று தெரிந்தும், அந்த பெண் அவரோடு பழகி அவருக்கு தன்னையும் வழங்கியுள்ளார் .அப்போதெல்லாம் அந்த பாட்டில் அந்த பெண்ணோடு உல்லாசமாக இருப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார் .அதன் பிறகு அவர் அந்த பெண்ணிடம் தான் தனியாக ஹோட்டல் தொடங்கவேண்டுமென்று கூறி 11 லட்சம் பணம் கேட்டார் .அப்போது அந்த பெண் பணம் தர மறுத்த போது அவர் அந்த பெண்ணோடு இருக்கும் உல்லாச வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டினார் .அதனால் பயந்து போன அந்த பெண் 11 லட்சம் பணம் கொடுத்தார் .இப்படியாக அவர் அடிக்கடி அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றியும் ,வீடியோவை காமித்து மிரட்டியும் கடந்த இரண்டு வருடங்களில் 33 லட்ச ரூபாய் பணமும் தங்க நகைகளும் வாங்கியுள்ளார் .பின்னர் அவர் அவரிடமிருந்து விலக தொடங்கியதும் அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை ஏமாற்றிய பாட்டீலையும் ,அவரின் மனைவியையும் கைது செய்தார்கள் .