×

பைக்கில் சென்ற பெண் -ரிப்பேரான பைக் – அடுத்து மூன்று வாலிபர்களால் நேர்ந்த கதி

குடும்ப விழாவுக்கு சென்ற19 வயதான பெண்ணை ,வழி மறித்து மூன்று வாலிபர்கள் பலாத்காரம் செய்தனர் . உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான ஒரு மாணவி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அவரின் தந்தை இறந்து விட்டதால் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார் .அவருக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்தவருடன் திருமணம் நிச்சசயிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் அவரின் சகோதரி வீட்டில் ஜூன் 7ம் தேதியன்று ஒரு குடும்ப விழா நடைபெற இருந்தது .அதனால் அந்த மாணவியை அவரின்
 


குடும்ப விழாவுக்கு சென்ற19 வயதான பெண்ணை ,வழி மறித்து மூன்று வாலிபர்கள் பலாத்காரம் செய்தனர் .


உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான ஒரு மாணவி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அவரின் தந்தை இறந்து விட்டதால் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார் .அவருக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்தவருடன் திருமணம் நிச்சசயிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் அவரின் சகோதரி வீட்டில் ஜூன் 7ம் தேதியன்று ஒரு குடும்ப விழா நடைபெற இருந்தது .அதனால் அந்த மாணவியை அவரின் சகோதரியும் அவரின் கணவரும் நேரில் வந்து தங்களின் வீட்டிற்கு அழைத்து சென்றனர் .அவர்கள் மூவரும் ஒரே பைக்கில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தார்கள் .
அப்போது அவர்களின் பைக் வழியில் ரிப்பேர் ஆகி நின்று விட்டது .அப்போது அந்த வழியாக வந்த சதேந்திரா மற்றும் பானு மற்றும் பிரமோத் என்று மூன்று வாலிபர்கள் அந்த தம்பதிகளை அடித்து துரத்தி விட்டனர் .பிறகு அந்த 19 வயதான மாணவியை அங்குள்ள ஒரு தோட்டத்திற்கு இழுத்து சென்றனர் .பின்னர் மூவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டனர் .
அதன் பிறகு அந்த பெண் அங்கிருந்து வீட்டிற்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார் .பிறகு அவரின் குடும்பத்தினர் அங்குள்ள காவல் நிலயத்தில் புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த மூவரில் பிரமோத் என்பவரை கைது செய்தனர் .அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செயப்பட்டது .மற்ற இரு குற்றாவாளிகளை தேடி வருகின்றனர்