×

வீடியோ காலில் வலை வீசிய பெண்கள் -பணத்தோடு வந்த தொழிலதிபர்கள் -அடுத்து ஹோட்டலில் நடந்த நாடகம்

பெண்களை வைத்து பல தொழிலதிபர்களை மயக்கி பணம் பறித்த கூட்டத்தை போலீசார் கைது செய்தனர் . மும்பையில் உள்ள கட்கோபர் பகுதியில் வசிக்கும் சாஹில் நடர், ரஞ்சித் மோர் மற்றும் அர்பாஸ் கான் என்ற மூவரும் சில பெண்களை வைத்து நூதன முறையில் விபச்சாரம் செய்து வந்தனர் .அவர்கள் முதலில் தங்களிடம் இருக்கும் பெண்களை விட்டு அந்த ஊரில் உள்ள தொழிலதிபர்களிடம் போனில் வீடியோ காலில் பேசி அவர்களை வலையில் விழ வைத்துள்ளார்கள் . அதன் பிறகு
 

பெண்களை வைத்து பல தொழிலதிபர்களை மயக்கி பணம் பறித்த கூட்டத்தை போலீசார் கைது செய்தனர் .

மும்பையில் உள்ள கட்கோபர் பகுதியில் வசிக்கும் சாஹில் நடர், ரஞ்சித் மோர் மற்றும் அர்பாஸ் கான் என்ற மூவரும் சில பெண்களை வைத்து நூதன முறையில் விபச்சாரம் செய்து வந்தனர் .அவர்கள் முதலில் தங்களிடம் இருக்கும் பெண்களை விட்டு அந்த ஊரில் உள்ள தொழிலதிபர்களிடம் போனில் வீடியோ காலில் பேசி அவர்களை வலையில் விழ வைத்துள்ளார்கள் .

அதன் பிறகு அந்த தொழிதிபர்கள் அந்த பெண்களின் ஆசை வார்த்தையை நம்பி பணத்தோடு அவர்கள் கூப்பிடும் ஹோட்டலுக்கு வருவார்கள் .பின்னர் அந்த ஹோட்டலில் அந்த பெண்களோடு நெருக்கமாக இருக்கும் நேரத்தில் அந்த சாஹில் நடர், ரஞ்சித் மோர் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோர் மேலும் சிலரை திரட்டி கொண்டு அந்த அறைக்குள் நுழைவார்கள் .அப்போது அவர்கள் அந்த தொழிதிபரிடம் தான் அந்த பெண்ணின் கணவர் என்றும் மற்றவர்கள் அந்த பெண்ணின் உறவினர்கள் என்றும் கூறுவார்கள் .அடுத்து அந்த தொழிலதிபரிடம் இந்த விஷயத்தை போலீசில் சொல்லாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுவார்கள் .அப்படி பணம் தரவில்லையென்றால் போலீசில் அவரை போட்டு கொடுத்து ,பலாத்கார வழக்கில் சிறையில் தள்ளி விடுவோமென்று கூறுவார்கள் .இப்படியாக அந்த ஊரில் பலரை மயக்கி ,மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்தனர் .இது பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்ததும் ,அந்த நபர்களை போலீசார்  கண்காணித்து அவர்களை கைது செய்தனர் .மேலும் ஷப்னம் என்ற ஒருவர் தலைமறைவாக உள்ளார்.அவரை போலீசார் தேடி வருகின்றனர்