×

சென்னையில் பயங்கரம்: நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் படுகொலை

நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கர செயலால் பள்ளிக்கரணை மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சரத்குமார்(25). இவர் நேற்று இரவு தனது வீட்டு வாசலில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது இரண்டு டூவீலர்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சரத்குமார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. அந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சரத்தின் தலை சிதறிப்போய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்படியும் ஆத்திரம் தீராமல் சரத்குமாரை
 

நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கர செயலால் பள்ளிக்கரணை மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சரத்குமார்(25). இவர் நேற்று இரவு தனது வீட்டு வாசலில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது இரண்டு டூவீலர்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சரத்குமார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.

அந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சரத்தின் தலை சிதறிப்போய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்படியும் ஆத்திரம் தீராமல் சரத்குமாரை சரமாரியாக வெட்டினர்.

மூன்று நாட்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்தில் திரண்டனர். கூட்டம் வருவதைப்பார்த்ததும் அக்கும்பல் தப்பிவிட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரும்பாக்கம் போலீசார் சரத் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததால் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர் போலீசார்.