×

சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்த 26 வயது இளைஞர்… நண்பர்கள் கேலி செய்ததால் கொன்றது அம்பலம்!

சொத்துக்கு ஆசைப்பட்டு 51 வயது பெண்ணை திருமணம் செய்த 26 வயது இளைஞர் இறுதியில் அப்பெண்ணை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக – கேரள எல்லை பகுதியான காரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சகா குமாரி (51). அழகு நிலையம் நடத்தி வந்த இவர் வசதிப்படைத்தவராக இருந்து வந்துள்ளார். இருப்பினும் திருமணம் செய்யாமல் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நலம் சரியில்லாத தனது தாயை அழைத்து கொண்டு திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அருண்(26) என்ற
 

சொத்துக்கு ஆசைப்பட்டு 51 வயது பெண்ணை திருமணம் செய்த 26 வயது இளைஞர் இறுதியில் அப்பெண்ணை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக – கேரள எல்லை பகுதியான காரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சகா குமாரி (51). அழகு நிலையம் நடத்தி வந்த இவர் வசதிப்படைத்தவராக இருந்து வந்துள்ளார். இருப்பினும் திருமணம் செய்யாமல் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நலம் சரியில்லாத தனது தாயை அழைத்து கொண்டு திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அருண்(26) என்ற இளைஞர் வேலை செய்து வந்துள்ளார். சகா குமாரி அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வர அருணுடன் நட்பு கிடைத்துள்ளது. இவர் வசதி படைத்தவர் என்பதை அறிந்த அருண் அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். முதலில் தயக்கம் காட்டிய சகா குமாரி அருணை காதலிக்க தொடங்கியுள்ளார். இவர்களின் உறவு குறித்து அறிந்த அருணின் குடும்பத்தினர் எதிரோனு தெரிவிக்க சகா குமாரியை வீட்டின் எதிர்ப்பை மீறி, யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு சகா குமாரி வீட்டில் செட்டிலாகியுள்ளார்.

இதை தொடர்ந்து திருமண புகைப்படத்தை சகா குமாரி இணையத்தில் பதிவிட, அதை பார்த்துவிட்ட அருணின் நண்பர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நண்பர்களின் கேலி மற்றும் வீட்டில் ஏற்பட்ட பிரச்னை என இருந்த அருண் திருமணமான இரண்டு மாதத்திலேயே மனைவியை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து கிறிஸ்துமஸ் குடிலுக்குப் பயன்படுத்திய சீரியல் லைட் ஒயரில் ஷார்ட் சர்க்கியூட் ஏற்படுத்தி வீட்டு வாசலில் போட்டுள்ளார். அதை மதித்த சகா குமாரி ஷாக் அடித்து துடிதுடித்து இறந்துள்ளார். மனைவி இறந்ததை உறுதிப்படுத்திய அருண், பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் இதுகுறித்து கூற, அருணின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்த நிலையில் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சகா குமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் இறந்து 4 மணிநேரம் ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அருணிடம் நடத்தியா கிடுக்குப்பிடி விசாரணையில், அவர் சகா குமாரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.