×

“அத்தை அடிக்கடி மெத்தைக்கு கூப்பிடுவார்” 36 வயதான அத்தைக்கு 20 வயதான வாலிபரோடு ஏற்பட்ட உறவின் விளைவு.

தன்னுடைய அத்தையோடு ஏற்பட்ட கள்ள உறவில் ஏற்பட்ட தகராறில் அவரை அவரின் காதலன் துப்பாக்கியால் சுட்டு கொன்றார் மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகேயுள்ள கல்யாண் பகுதியில் உள்ள சப்பர்டே கிராமத்தில் வசிக்கும் பவன் என்ற 20 வயதான வாலிபர் அவரின் 36 வயதான சுவர்ணா கோட் என்ற அத்தையின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார் .அப்போது இருவருக்கும் கள்ள உறவு மலர்ந்துள்ளது ,இந்த உறவு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நாளடைவில் அந்த ஊரில் உள்ள
 


தன்னுடைய அத்தையோடு ஏற்பட்ட கள்ள உறவில் ஏற்பட்ட தகராறில் அவரை அவரின் காதலன் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்


மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகேயுள்ள கல்யாண் பகுதியில் உள்ள சப்பர்டே கிராமத்தில் வசிக்கும் பவன் என்ற 20 வயதான வாலிபர் அவரின் 36 வயதான சுவர்ணா கோட் என்ற அத்தையின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார் .அப்போது இருவருக்கும் கள்ள உறவு மலர்ந்துள்ளது ,இந்த உறவு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நாளடைவில் அந்த ஊரில் உள்ள பலருக்கும் தெரிந்து விட்டது .
இந்நிலையில் சப்பர்டே கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நிச்சயதார்த்த விழா நடைபெற்றது ,அந்த விருந்துக்கு அந்த அத்தை, அவரின் காதலன் பவனை அழைத்துள்ளார் .அப்போது அவரின் அழைப்பை ஏற்று பவனும் சென்றார் .அப்போது அங்கு இருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையால் தகராறு நடந்துள்ளது .அதனால் அந்த விருந்தின் போது பவன் அவரின் அத்தை சுவர்ணா கோட்டை தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் சுட்டார் .அப்போது அவரின் தாயார் பாரதி மத்ரே (40) அவரை காப்பாற்ற குறுக்கே வந்தார் .அதனால் அவர் மீதும் இந்த துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்தார் .
ஆனால் அவரின் அத்தை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் .அதன் பின்னர் காயமடைந்த மத்ரேவை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர் .அதன் பிறகு பவன் அந்த விருந்திலிருந்து தப்பியோடி விட்டார் .பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய பவனை கைது செய்து விசாரித்தார்கள் .அப்போது அவர் தான்தான் தன்னுடைய அத்தையை சுட்டு கொன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார் .