×

கல்யாணத்தை மறைத்த காதலன் -கர்ப்பத்தை கலைத்த காதலி -நர்ஸுக்கு நடந்த சோகம்.

ரகசிய திருமணம் செய்து காதலரோடு வாழ்ந்து வந்த ஒரு நர்ஸ், தங்களின் கல்யாணத்தை உலகிற்கு தெரியப்படுத்ததால் ஏற்பட்ட வேதனையில் தற்கொலை செய்து கொண்டார் . ஹைதராபாத்தின் பஞ்சரா ஹில்ஸில் வசிக்கும் 20 வயதான ஐஸ்வர்யா என்ற நர்சிங் பெண் இன்ஸ்டாக்ராமில் ஆஷர் என்ற வாலிபரை சந்தித்தார் .ஆரம்பத்தில் இருவரும் நட்போடுதான் பேசிக்கொண்டிருந்தனர் .பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது .அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர் .ஆனால் அவர்களின் இந்த திருமணத்திற்க்கு இருவர் வீட்டிலும்
 


ரகசிய திருமணம் செய்து காதலரோடு வாழ்ந்து வந்த ஒரு நர்ஸ், தங்களின் கல்யாணத்தை உலகிற்கு தெரியப்படுத்ததால் ஏற்பட்ட வேதனையில் தற்கொலை செய்து கொண்டார் .


ஹைதராபாத்தின் பஞ்சரா ஹில்ஸில் வசிக்கும் 20 வயதான ஐஸ்வர்யா என்ற நர்சிங் பெண் இன்ஸ்டாக்ராமில் ஆஷர் என்ற வாலிபரை சந்தித்தார் .ஆரம்பத்தில் இருவரும் நட்போடுதான் பேசிக்கொண்டிருந்தனர் .பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது .அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர் .ஆனால் அவர்களின் இந்த திருமணத்திற்க்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு நிலவியது .அதனால் இருவரும் ரகசியமாக ஒரு கோவிலில் 2020ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்கள் .அதன் பிறகு இருவரும் தங்களின் திருமணத்தை பற்றி அவர்களின் வீடுகளில் கூரினார்கள் .அப்போது இருவீட்டாரும் அந்த காதலர்களுக்கு வருமானம் இல்லாததால் இருவரும் சம்பாதிக்க ஆரம்பித்ததும் இந்த கல்யாணத்தை எற்றுக்கொள்கிறோம் என்று கூறி இருவரையும் பிரித்து விட்டார்கள்
அதன் பிறகு அந்த பெண் ஒரு வேலைக்கு செல்ல தொடங்கியதும், இருவரும் ஒரு வாடகை வீட்டில் வசித்தார்கள் .அப்போது அந்த ஐஸ்வர்யா இருமுறை கர்ப்பமானார் .ஆனால் அவரின் காதலன் பேச்சை கேட்டு கர்ப்பத்தை கலைத்து விட்டார் .பின்னர் இருவரும் மீண்டும் பிரிந்து அவர்களின் பெற்றோரோடு சென்று விட்டனர் .இதற்கிடையே அந்த பெண் தன்னுடைய காதலர் அஷெரிடம் தங்களின் திருமணத்தை ஊருக்கும் உலகிற்கும் தெரிவிக்கலாம் என்று கேட்டபோது அதற்கு அந்த அஸெர் ஒப்புக்கொள்ளவில்லை .இதனால் மிகவும் கடுப்பான அந்த பெண் காதலனுக்கு வீடியோ மெஸேஜ் அனுப்பிவிட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது பற்றி போலீசுக்கு தெரியவந்ததும் அவர்கள் அந்த பெண்னின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .