×

“கண்ட நேரத்துல கண்டவன்லாம் காண்டத்தோட வர்ரான்” -விபச்சார கூட்டத்திடம் சிக்கிய பெண்கள் கதறல்

படிப்புக்கேற்ற வேலையை வாங்கி தருகிறோம் என்று, பங்களாதேஷை சேர்ந்த மூன்று பெண்களை கூட்டி வந்து விபச்சாரத்தில் தள்ளிய சிலரை போலீசார் அதிரடி வேட்டை நடத்தி கைது செய்துள்ளார்கள் மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான சமீர் மற்றும் ராக்கி ஆகிய இருவரும் பங்களாதேஷிலிருந்து 20 வயதான மூன்றுபெண்களை வேலை வாங்கி தருவதாக சென்ற மாதம் கொல்கத்தாவுக்கு கூட்டி வந்துள்ளனர் .ஆனால் அந்த பெண்களுக்கு அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை .அதற்கு பதிலாக
 


படிப்புக்கேற்ற வேலையை வாங்கி தருகிறோம் என்று, பங்களாதேஷை சேர்ந்த மூன்று பெண்களை கூட்டி வந்து விபச்சாரத்தில் தள்ளிய சிலரை போலீசார் அதிரடி வேட்டை நடத்தி கைது செய்துள்ளார்கள்

மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான சமீர் மற்றும் ராக்கி ஆகிய இருவரும் பங்களாதேஷிலிருந்து 20 வயதான மூன்றுபெண்களை வேலை வாங்கி தருவதாக சென்ற மாதம் கொல்கத்தாவுக்கு கூட்டி வந்துள்ளனர் .ஆனால் அந்த பெண்களுக்கு அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை .அதற்கு பதிலாக அந்த பெண்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்னர் . இதனால் அதிர்ச்சியைந்த அந்த பெண்கள் அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டனர் .
அதனால் அந்தப் பெண்களில் ஒருவர் அங்குள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார் .அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் அந்த பெண் தன்னையும் இன்னும் சில பெண்களையும் ராக்கி என்பவர் பங்களாதேஷிலிருந்து வேலை வாங்கி தருவதாக கூட்டி வந்து சமீர் என்பரிடம் விபச்சாரத்திற்கு விற்று விட்டதாக கூறினார் .மேலும் அவர் தங்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும் உடனே வந்து மீட்குமாறும் வழித்தடங்களை போலீசுக்கு அனுப்பினார் .போலிசார் அவர் அனுப்பிய இணைய வழித்தடம் கொண்டு அவர்களை தேடி வந்து மீட்டனர் .பிறகு போலீசார் இந்த விபச்சார மோசடியை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கைது செய்தனர் .மேலும் இருவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.