×

“கட்டிக் கொடு இல்லேன்னா வெட்டி விடு” -காதலியின் பெற்றோருக்கு நேர்ந்த கதி..

காதலியை கட்டி கொடுக்காத காதலியின் அப்பாவை அந்த பெண்ணின் காதலர் வீட்டிற்க்குள் புகுந்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது . கர்நாடகாவின் கலாபுராகியில் மகேஷ் சுபாஷ் ரத்தோட் என்ற வாலிபர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .ஆனால் அந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார் .இதனால் அவரின் தந்தையிடம் அந்த பெண்ணை தனக்கு கல்யாணம் கட்டி கொடுக்க கேட்டார் .ஆனால் அவர் அந்த கல்யாணத்துக்கு மறுத்ததோடல்லமல் ,அவரின் மீது போலீசில் புகாரும் கொடுத்தார்
 

காதலியை கட்டி கொடுக்காத காதலியின் அப்பாவை அந்த பெண்ணின் காதலர் வீட்டிற்க்குள் புகுந்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .

கர்நாடகாவின் கலாபுராகியில் மகேஷ் சுபாஷ் ரத்தோட் என்ற வாலிபர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .ஆனால் அந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார் .இதனால் அவரின் தந்தையிடம் அந்த பெண்ணை தனக்கு கல்யாணம் கட்டி கொடுக்க கேட்டார் .ஆனால் அவர் அந்த கல்யாணத்துக்கு மறுத்ததோடல்லமல் ,அவரின் மீது போலீசில் புகாரும் கொடுத்தார் .
அதனால் கோபமடைந்த மஹேஷு தனது நண்பர்கள் டோப்பு ஹேமலா ரத்தோட், ஏசு ஹேமலா ரத்தோட், சந்தோஷ் சவான் மற்றும் ரவி சவான் ஆகியோருடன் ,அக்டோபர் 3 ம் தேதி கமலாப்பூர் தாலுகாவின் தினசி தந்தாவில் உள்ள அவரின் காதலியின் வீட்டிற்கு சென்றார் .

அங்கு சென்ற அவர்கள் அவரின் காதலியின் அப்பாவிடம் போலீசில் தங்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெருமாறும் ,அவரின் மகளை தனக்கு உடனடியாக நிச்சயம் செய்து தருமாறும் கேட்டு கலவரம் செய்தனர் .அதனால் ஏற்பட்ட கலவரத்தில் அந்த மகேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் குழுவினர் அந்த பெண்ணின் தந்தை மற்றும் தாய் ஆகியோரை வெட்டி கொலை செய்துள்ளனர் .
இந்த கொலை பற்றி கேள்விப்பட்ட போலிஸார் மகேஷு மற்றும் அவரின் நண்பர்கள் ஆகியோரை கைது செய்தார்கள் .முன்னதாக மகேஷ் காதலிக்கும் பெண்ணின் 14 வயது சகோதரியை அவரின் நண்பரின் ஒருவர் காதலித்து வந்துள்ளதால் அவரும் இந்த கொலை சம்பவத்தில் சேர்ந்து ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் கூறினார்கள் .