×

19 வயது பெண்ணை காரில் கடத்தி சென்று வன்கொடுமை செய்து பின் ஆலமரத்தில் பிணமாக தொங்கவிட்ட கொடூரன்கள்! 

குஜராத்தில் காணாமல்போன மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரவல்லி மாவட்டம் சரியா என்ற கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண் தன் சகோதரியுடன் கடைத்தெருவுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகு சகோதரி மட்டும் வீடு திரும்பிய நிலையில் பெற்றோர், மகள் எங்கே என கேட்டுள்ளனர். உடனே அவர் பிமல் பர்வாட் என்ற இளைஞர் காரில் தங்கையை கடத்தி சென்றதாகவும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதாக பெற்றோர்களிடம் தெரிவித்தார்.
 

குஜராத்தில் காணாமல்போன மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரவல்லி மாவட்டம் சரியா என்ற கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண் தன் சகோதரியுடன் கடைத்தெருவுக்கு சென்றுள்ளார்.  நீண்ட நேரத்திற்கு பிறகு சகோதரி மட்டும் வீடு திரும்பிய நிலையில் பெற்றோர், மகள் எங்கே என கேட்டுள்ளனர். உடனே அவர் பிமல் பர்வாட் என்ற இளைஞர் காரில் தங்கையை கடத்தி சென்றதாகவும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதாக பெற்றோர்களிடம் தெரிவித்தார். உடனே அந்த பெண்களின் பெற்றோர், மகளை கண்டுபிடித்துக்கொடுக்குமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக உங்கள் பெண், அந்த இளைஞரிடம் ஓடி போய் விட்டால் இருவரும் வெளியூர் சென்றிருக்கின்றனர். திருமணம் செய்துகொண்டு வந்துவிடுவார்கள் என கூறியுள்ளனர்..

மகள் காணாமல் போய் 6 நாட்கள் கழித்து சரியா கிராமத்திலுள்ள ஆலமரத்தில் இளம்பெண் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்துவந்த பெற்றோர், மகளின் நிலையை கண்டு கதறி அழுதனர். அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்குட்படுத்தியபோது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் பின் அந்த பெண்ணின் தாத்தா, பிமல் பர்வாட் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பிமலிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த இளைஞர், கார் என்னுடையது தான் ஆனால் பெண்ணை நான் கடத்தவில்லை என் நண்பர்களான தர்ஷன் பர்வாட், சதீஷ் பர்வார் மற்றும் ஜிகார் ஆகியோர்தான் கடத்தினார்கள் என கூறியுள்ளார். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.