×

“ஊரடங்கிலும் அடங்காமல் அலையும் காமக்கொடூரர்கள்”- காட்டு பகுதி ..தனியா மாட்டிக்கொண்ட 17 வயது பெண் ..பல பேரால் பலாத்காரம் ..

இந்த ஊரடங்கு நேரத்திலும் குடிபோதையிலிருந்த பல வாலிபர்கள் ஒரு 17 வயது பெண்ணை கடத்தி கூட்டாக பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது . திரிபுராவின் கோவாய் என்ற இடத்தில் ஜூலை 21 ம் தேதி ஒரு 17 வயது பெண் தனியாக போய்க்கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக ஒரு வேனில் வந்த ஐந்து இளைஞர் கூட்டம் ,அந்த பெண்ணை அங்குள்ள காசியமங்கல் வனப்பகுதிக்கு தூக்கிக்கொண்டு சென்றனர் .பிறகு அந்த பெண்ணை அந்த ஐந்து பேரும் பலாத்காரம் செய்து
 

இந்த ஊரடங்கு நேரத்திலும் குடிபோதையிலிருந்த பல வாலிபர்கள் ஒரு 17 வயது பெண்ணை கடத்தி கூட்டாக பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

திரிபுராவின் கோவாய் என்ற இடத்தில் ஜூலை 21 ம் தேதி ஒரு 17 வயது பெண் தனியாக போய்க்கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக ஒரு வேனில் வந்த ஐந்து இளைஞர் கூட்டம் ,அந்த பெண்ணை அங்குள்ள காசியமங்கல் வனப்பகுதிக்கு தூக்கிக்கொண்டு சென்றனர் .பிறகு அந்த பெண்ணை அந்த ஐந்து பேரும் பலாத்காரம் செய்து விட்டு ,அந்த பெண்ணை அவரின் நண்பர்கள் அறைக்கு தூக்கி கொண்டு சென்றனர் .அந்த நண்பர்கள் அன்றிரவு அங்கு அவர்கள் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தனர் .
பிறகு மறுநாள் காலையில் அந்த பெண்ணின் வீட்டருகே அந்த பெண்ணை காரில் இறக்கிவிட்டு ஓடி விட்டனர் .
மறுநாள் வீட்டிற்கு வந்த பெண், இரவு நடந்த விஷயத்தினை தன்னுடைய பெற்றோரிடம் கூறினார் .
உடனே அவரின் பெறோர்கள் அவரை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ,அந்த நபர்கள் மீது பாலியல் புகார் கொடுத்தார்கள் .
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர் .பிறகு விசாரணைக்காக சம்பவம் நடந்த அந்த காட்டுப்பகுதிக்கு சென்றனர் .அப்போது கிடைத்த சில துப்புகளால் போலீசார் உடனடியாக பத்து பேரை பிடித்து விசாரித்ததில் ,அதில் ஐந்து பேர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும் ,மீதி ஐந்துபேர் அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறினார்கள் .அனைவரையும் சிறையிலடைத்த போலீசார் ,மேலும் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்

இதற்கிடையில், இதுபோன்ற கொடூரமான வழக்குகளில் விரைவான மற்றும் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென ஒரு மாணவர் குழு கூறியுள்ளது. திரிபுரா பல்கலைக்கழக மாணவியர் தலைவி அஸ்மிரா டெப் வர்மா பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராக குரல் எழுப்புமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.