“டீனேஜ் பையனின் புது டெக்னீக்” வீட்ல சிலவுக்கு பணம் தரலேன்னா இத பாலோ பண்ணாதீங்க..
உல்லாச வாழ்க்கைக்கு பணம் தராத தாத்தாவின் பேங்க் அக்கௌன்ட்டிலிருந்து புது விதமான டெக்னீக்கை பயன்படுத்தி பணம் திருடிய பேரனை போலீசார் கைது செய்துள்ளார்கள்
ஆக்ராவில் வசிக்கும் ராஜாராம் என்பவர் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி .இவர் தன்னுடைய மகன் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார் .இவரின் 17 வயது டீனேஜ் பேரன் இவரிடம் அடிக்கடி உல்லாசமாய் வாழவும் நண்பர்களோடு ஊர் சுற்றவும் சிலவுக்கு பணம் கேட்டுள்ளார் .ஆனால் அந்த தாத்தாவோ காசு கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார் .
இதனால் தன்னுடைய தாத்தாவின் பேங்க் அக்கௌன்ட்டை அவரின் பேரன் செக் பண்ணிய போது அதில் லட்சக்கணக்கில் பணமிருப்பதை தெரிந்து கொண்டார் .உடனே அவரின் அக்கௌன்ட்டிலிருந்து பணத்தை ஆட்டைய போட ஒரு மாஸ்டர் பிளான் போட்டார் அந்த சிறுவன் .
அதன் படி அடிக்கடி அவருடைய அக்கௌன்ட்டிலிருந்து சிறு சிறு தொகையாக தன்னுடைய வங்கி அக்கௌண்டிற்கு பணத்தை ட்ரான்ஸ்பெர் செய்து கொண்டு வநதான் ,வங்கியிலிருந்து அவரின் தாத்தா வுக்கு பேலன்ஸ் மெஸேஜ் வந்தால் அவரின் செல்போனை எடுத்து அந்த மெஸேஜை இவன் அழித்து விடுவான் .இப்படியாக கடந்த ஐந்து மாதமாக அவரின் அக்கௌன்ட்டிலிருந்து தன்னுடைய அக்கௌண்டிற்கு 15 லட்ச ரூபாய் மாற்றியுள்ளான் . ,அந்த பணத்தை எடுத்து உல்லாசமாக ஊர் சுற்றி ,நண்பர்களோடு பார்ட்டிக்கு போய் காலம் கழித்துள்ளார் .ஒரு நாள் அவரின் தாத்தா வங்கிக்கு சென்று தன்னுடைய அக்கௌன்ட்டை செக் பண்ணிய போது 15 லட்சம் ரூபாய் அவரின் அக்கௌண்டில் திருடப்பட்டது கண்டு திடுக்கிட்டு போலீசில் புகார் கொடுத்தார் .சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரின் பேரன் இந்த பணத்தை எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்தார்கள் .
Help to improve it!