×

தாயுடன் தகாத உறவில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவன்

 

ராசிபுரம் அருகே தாயுடன் தகாத உறவில் இருந்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஆட்டோ டிரைவரை வெட்டிய சிறுவன் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகனும், ஆட்டோ டிரைவருமான கதிரவன்(42), நேற்று இரவு ஊர் பொது இடத்தில் நண்பர்களுடன் பேசிக்‌ கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 17 வயது சிறுவன், திடீரென மறைத்து வைத்திருந்த கோடாரியால் கதிரவனின் கழுத்தில் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கதிரவனின் தாயார் ஜானகி, சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்த மகனை கண்டு அதிர்ச்சி அடைந்தோடு, கதறி அழுது சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பலியானார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் கதிரவனை மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சிறுவனின் தாயுடன் ஆட்டோ டிரைவர் கதிரவன் தகாத உறவில் இருந்ததும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் சிறுவன், கதிரவனை வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.