×

“மாடு மேய்க்க வந்த பெண்ணை இப்படி மேய்ஞ்சிட்டிங்களே ” -ஒரு குடும்பத்தையே குதறிய கொடுமை.

தன் வீட்டில் மாடு மேய்க்கும் ஒரு குடும்பத்து பெண்னை கெடுத்து ,அவரின் தந்தை மற்றும் நாலு வயது சிறுமியை கொன்ற ஆறு பேரை போலீஸ் கைது செய்துள்ளது . சத்தீஸ்கரில் கோர்பா மாவட்டத்தில் பார்பானி கிராமத்தில் வசிக்கும் ஒரு முதியவர் , கடந்த ஆண்டு ஜூலை முதல் மஞ்ச்வர் என்பவரின் வீட்டில் கால்நடை மேய்ப்பவராக பணிபுரிந்து வந்தார்.அவருக்கு 16 வயதில் ஒரு மகளும் ,நாலு வயதில் ஒரு பேத்தியும் இருந்தார்கள் .அந்த வீட்டின் உரிமையாளர் மஞ்சவருக்கு அந்த
 

தன் வீட்டில் மாடு மேய்க்கும் ஒரு குடும்பத்து பெண்னை கெடுத்து ,அவரின் தந்தை மற்றும் நாலு வயது சிறுமியை கொன்ற ஆறு பேரை போலீஸ் கைது செய்துள்ளது .


சத்தீஸ்கரில் கோர்பா மாவட்டத்தில் பார்பானி கிராமத்தில் வசிக்கும் ஒரு முதியவர் , கடந்த ஆண்டு ஜூலை முதல் மஞ்ச்வர் என்பவரின் வீட்டில் கால்நடை மேய்ப்பவராக பணிபுரிந்து வந்தார்.அவருக்கு 16 வயதில் ஒரு மகளும் ,நாலு வயதில் ஒரு பேத்தியும் இருந்தார்கள் .அந்த வீட்டின் உரிமையாளர் மஞ்சவருக்கு அந்த 16 வயதான அவரின் மகளின் மீது ஒரு கண்ணிருந்ததால் அவரை அடைய திட்டமிட்டார் .அதனால் கடந்த ஜனவரி 29ம் தேதியன்று கடுப்ரோடா அருகே காடுகளால் சூழப்பட்ட ஒரு மலையின் அடிவாரத்திற்கு அந்த 16 வயதான பெண் மற்றும் அவரின் தந்தை மற்றும் பேத்தி ஆகியோரை அழைத்துச் சென்றார் ,
அவரோடு அவரின் நண்பர்கள் சாந்த்ரம் மஜ்வர் (45), அப்துல் ஜபார் (29), அனில் குமார் சர்தி (20), பர்தேஷி ராம் பானிகா (35), ஆனந்த் ராம் பானிகா (25), உம்ஷங்கர் யாதவ் (21) ஆகியோரும் சென்றார்கள் .பின்னர் அனைவரும் ஒரு இடத்தில மது அருந்திவிட்டு அந்த 16 வயதான பழங்குடி பெண்ணை பலாத்காரம் செய்தார்கள்.அதன் பின்னர் இந்த விஷயம் அந்த பெண்ணின் தந்தைக்கு தெரிந்து விட்டதால் அவரை கொன்று விட்டு அருகேயிருந்த அவரின் நாலு வயதான பேத்தியையும் கொன்று விட்டார்கள்
அதன் பிறகு இறந்த பெரியவரின் மகன் கடந்த செவ்வாயன்று தந்தை ,மகள் மற்றும் சகோதரியை காணாததால் போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது அவர் வேலை பார்க்கும் வீட்டின் உரிமையாளர் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து அவரின் மகளை கெடுத்து அவரை கல்லால் அடித்து காயப்படுத்திவிட்டு ,அவரின் தந்தை மற்றும் பேத்தியை கொன்றதை கண்டு பிடித்தார்கள் .பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள் .