×

“ஐ !எனக்கொரு பொம்மை பொறந்திருக்கு” -மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு பிரசவம் -கெடுத்தது யார் ?

ஒரு மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதால், அந்த பெண்ணை கெடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிய குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள். குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட்டில் ஒரு மனநிலை சரியில்லாத14 வயது பெண் தன்னுடைய தாயோடு வசித்து வந்தார் .அந்த குடும்பத்தில் அவரைப்போல வேறு சிலரும் இப்படி மன நிலை பாதிப்புக்குள்ளாகி இருந்தனர் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த மே மாதம் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால்
 

ஒரு மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதால், அந்த பெண்ணை கெடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிய குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.


குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட்டில் ஒரு மனநிலை சரியில்லாத14 வயது பெண் தன்னுடைய தாயோடு வசித்து வந்தார் .அந்த குடும்பத்தில் அவரைப்போல வேறு சிலரும் இப்படி மன நிலை பாதிப்புக்குள்ளாகி இருந்தனர் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த மே மாதம் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் அவரின் தந்தை அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்து திடுக்கிட்டனர் .
இதனால் அந்த தந்தையும் அந்த விஷயத்தை கேட்டு திடுக்கிட்டு, அந்த மனநிலை சரியில்லாத பெண்ணிடம் கேட்ட போது, அவரால் அவருடைய கர்ப்பதையும், கர்ப்பத்துக்கு காரணமானவரையும் உணரமுடியவில்லை .மேலும் அது பற்றி எதுவம் அவருக்கு கூற தெரியவில்லை .ஆனால் அந்த சிறுமி இப்போது ஒரு குழந்தையை பெற்றுக்கொடுத்துள்ளார் .
மேலும் இந்த விவகாரம் பற்றி அந்த பெண்னின் தந்தை அங்குள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தார் ,.அப்போது அவர்களாலும் இந்த பெண்ணைக்கெடுத்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை .அதனால் கோர்ட் அந்த பெண்ணின் குழந்தையை டி.என். ஏ. சோதனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது .மேலும் இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்கும் முயற்ச்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள் .