×

“வாடகை வேணாம் நீ வந்தா போதும்” குடியிருந்த பெண்ணை விரட்டி வேட்டையாடிய வீட்டு உரிமையாளர்கள்..

வீட்டில் தனியே இருந்த 14 வயது பெண் வீட்டு உரிமையாளர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை ஹரியானாவில் அரங்கேறியுள்ளது . ஹரியானாவின் யமுனா நகரில் சதர் பகுதியில் ஒரு 14 வயது சிறுமியுடன், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தம்பதியினர், ரிஜ்வான் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர் . அவர்கள் தினமும் அந்த 14 வயது பெண்ணை வீட்டில் தனியே விட்டுவிட்டு வேலைக்கு சென்று வருவது வழக்கம் .கடந்த திங்கள்கிழமை வழக்கம்போல அந்த பெண்ணை தனியே விட்டு
 

வீட்டில் தனியே இருந்த 14 வயது பெண் வீட்டு உரிமையாளர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை ஹரியானாவில் அரங்கேறியுள்ளது .
ஹரியானாவின் யமுனா நகரில் சதர் பகுதியில் ஒரு 14 வயது சிறுமியுடன், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தம்பதியினர், ரிஜ்வான் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர் .

அவர்கள் தினமும் அந்த 14 வயது பெண்ணை வீட்டில் தனியே விட்டுவிட்டு வேலைக்கு சென்று வருவது வழக்கம் .கடந்த திங்கள்கிழமை வழக்கம்போல அந்த பெண்ணை தனியே விட்டு விட்டு அவரின் பெற்றோர்கள் வேலைக்கு சென்றுவிட்டனர் .அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் ரிஜ்வான் மற்றும் ஷாருக் ஆகியோர் தனியே இருந்த பெண்ணின் வீட்டிற்குள் மெல்ல வந்தனர் .பிறகு அவர்கள் வீட்டின் கதவை தட்டியபோது அந்த பெண் வந்து கதவை திறந்தார் .அப்பெண் கதவை திறந்ததும் உள்ளே நுழைந்த அவர்கள் அந்த பெண்ணிடம் “வாடகை வேணாம் அதுக்கு ஓகே வா ?”என்றனர் .அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை அவர்கள் வாயை பொத்தி, அருகே இருந்த கட்டிலில் தள்ளி இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டனர் .இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அழுது கொண்டிருந்தார் .

பிறகு இரவு எட்டு மணியளவில் வேலையிலிருந்து திரும்பிய அவரின் பெற்றோர்கள் மகளிடம் ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது? என்று கேட்டபோது, அவர் வீட்டு உரிமையாளர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தினை கூறினார் .
இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர்கள் மகளை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு சென்றனர் .பிறகு அவர்கள் வீட்டு உரிமையாளர் ரிஜ்வான் மற்றும் ஷாருக் மீது பலாத்கார புகார் கொடுத்தனர் .புகாரை பெற்ற போலீசார் புதன்கிழமை அந்த இரு குற்றவாளிகளையும் கைது செய்தனர்.