×

“துணி காயவைக்க போன என்னை துணியில்லாமல் ..”மொட்டை மாடியில் வேட்டையாடப்பட்ட 11 வயது பெண்.

ஒரு 14 வயது பணக்கார வீட்டு சிறுவன் வீட்டு வேலை செய்யும் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பன்வெல் பகுதியில் வசிக்கும் 14 வயதான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பணக்கார வீட்டை சேர்ந்தவன் .அதே பகுதியில் வீட்டு வேலைகள் செய்யும் ஒரு பெண்ணுக்கு 11 வயதில் ஒரு மகளும் ,5 வயதில் ஒரு மகனும் இருக்கிறார் .கணவனில்லாமல் தனியாக அந்த தாய் தன்னுடைய குழந்தைகளை வளர்த்து
 


ஒரு 14 வயது பணக்கார வீட்டு சிறுவன் வீட்டு வேலை செய்யும் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பன்வெல் பகுதியில் வசிக்கும் 14 வயதான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பணக்கார வீட்டை சேர்ந்தவன் .அதே பகுதியில் வீட்டு வேலைகள் செய்யும் ஒரு பெண்ணுக்கு 11 வயதில் ஒரு மகளும் ,5 வயதில் ஒரு மகனும் இருக்கிறார் .கணவனில்லாமல் தனியாக அந்த தாய் தன்னுடைய குழந்தைகளை வளர்த்து வருகிறார் .இந்நிலையில் அந்த பணக்கார வீட்டு சிறுவன் அந்த வீட்டு வேலை செய்யும் சிறுமியை தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் துணியை காய வைக்க கூப்பிட்டார் .
அவரின் பேச்சை உண்மையென நம்பி சென்ற அந்த 11 வயது சிறுமியை அந்த வாலிபர் அங்கே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .பிறகு அந்த சிறுமியிடம் இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் அவரையும் அவரின் தம்பியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் .
அதனால் பயந்து போன அந்த சிறுமி இந்த விஷயத்தை வீட்டில் சொல்லவில்லை .பிறகு வயிற்றுவலி என்று மருத்துவரிடம் அந்த பெண்ணை அவரின் தாய் அழைத்து சென்றார் .அப்போது அவரை சோதனை செய்த மருத்துவர் இந்த பலாத்கார விஷயத்தினை கண்டுபிடித்தார் .
பிறகு அந்த மருத்துவர் அந்த தாயிடம் அவரின் மகள் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தை கூறியதும் அவர் மகளிடம் விசாரித்தார் .அதன் மூலம் அந்த 14 வயது சிறுவன் செய்த பலாத்கார வேலை வெளியே தெரிந்தது .பிறகு அந்த சிறுவன்மீது போலிஸில் புகார் கூறப்பட்டது .போலீசார் விசாரித்து வருகிறார்கள்.