×

ஆபாச படம் பார்க்கும் தந்தையால் 9 வயது சிறுமியை கொன்ற 14 வயது மகன்! திருச்சியில் பரபரப்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் என்ற கிராமத்தில் 9 வயது சிறுமி ஒருவர் மல்லிகை தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை மீட்ட அப்பகுதிவாசிகள் அவரை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்த நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பலியாகினார். இதுகுறித்த விசாரணையில் சிறுமி இறப்புக்கு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் தான் காரணம் என தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுவனை பிடித்து விசாரித்ததில், சிறுவனின் தந்தை செல்போனில்
 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் என்ற கிராமத்தில் 9 வயது சிறுமி ஒருவர் மல்லிகை தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை மீட்ட அப்பகுதிவாசிகள் அவரை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்த நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பலியாகினார்.

இதுகுறித்த விசாரணையில் சிறுமி இறப்புக்கு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் தான் காரணம் என தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுவனை பிடித்து விசாரித்ததில், சிறுவனின் தந்தை செல்போனில் அடிக்கடி ஆபாச படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதை நோட்டமிட்ட சிறுவன் தானும் அதுபோன்ற படங்களை பார்க்க தொடங்கியுள்ளான். இதையடுத்து சம்பவதன்று மல்லிகை தோட்டத்திற்கு சென்ற 9 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுமி தனது வீட்டில் சொல்வதாக கூறியுள்ளார். இதனால் பயந்து போன சிறுவன் அருகில் இருந்த கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.