×

13 வயது சிறுமி படுகொலை: அத்தை மகனின் வெறிச்செயல்!

மூத்த மகள் மோனிஷா திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில் தங்கையை அடிக்கடி வந்து பார்த்து விட்டு சென்றுள்ளார். சென்னை: சொத்து தகராறில் 13 வயது சிறுமி குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வேதவல்லி. தனியார் மருத்துவமனையில் வேலைசெய்து வரும் இவருக்கு பாபு, மாதவன் என்ற இரு மகன்கள் உள்ளனர். பாபுக்கு திருமணமாகி அயனாவரத்தில் வசித்து வருகிறார். வேதவல்லியின் தம்பி பூபதியும், அவருடைய மனைவியும் கடந்த சில
 

மூத்த மகள் மோனிஷா திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில் தங்கையை அடிக்கடி வந்து பார்த்து விட்டு சென்றுள்ளார்.

சென்னை: சொத்து தகராறில்  13 வயது சிறுமி குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வேதவல்லி. தனியார் மருத்துவமனையில் வேலைசெய்து வரும் இவருக்கு பாபு, மாதவன் என்ற இரு மகன்கள் உள்ளனர். பாபுக்கு திருமணமாகி அயனாவரத்தில் வசித்து வருகிறார்.  வேதவல்லியின் தம்பி பூபதியும், அவருடைய மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் அத்தை  வேதவல்லி தம்பியின் இளையமகளான ஷோபனாவை பாசத்துடன் வளர்த்துவந்துள்ளார். மேலும் மூத்த மகள் மோனிஷா திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில் தங்கையை அடிக்கடி வந்து பார்த்து விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வேதவல்லி பணிக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் ஷோபனா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது மோனிஷா ஷோபாவை பார்க்க வீட்டுக்கு வர வீடு வெளிப்புறமாக தாழிட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்ற மோனிஷாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  காரணம்  ஷோபனா கத்தி குத்துகளுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து  பரங்கிமலை போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஷோபனாவின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வேதவல்லியின் மூத்த மகன் பாபு வீட்டை தன் பெயருக்கு எழுதிக்கொடுக்க வற்புறுத்தி வந்ததாகவும், ஷோபனா இருப்பதால் இந்த வீட்டை யாருக்கும் தரமுடியாது என்று வேதவல்லி கூறியதாகவும் தெரிகிறது.  இதனால் ஆத்திரமடைந்த பாபு வீட்டில் தனியாக இருந்த ஷோபனாவை கொலை செய்துள்ளது தெரியவந்தது.  இதனால் தலைமறைவாக உள்ள பாபுவை போலீசார் தேடி வருகின்றனர். ஷோபனாவுக்கு பாலியல் தொல்லை ஏதேனும் கொடுக்கப்பட்டதா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.