×

மலை கிராமத்தில் 12 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த கும்பல்!
 

 

பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் அருகே உள்ள மலை கிராமத்தில் 12 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. 

பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்ஸ்லிப் பகுதியிலுள்ள ஒரு பழங்குடியினர் கிராமத்தில் வசிக்கும் 12 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளதாக  தன்னார்வலர் தன்ராஜ் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு  அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஆனைமலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுத்தியுள்ளனர்.

குற்றவாளிகளை தேடிவரும் போலீசார், மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா? என்பது குறித்து முழு விவரம் தெரியவரும் என தெரிவிக்கின்றனர்.