×

திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி மீது வந்த சந்தேகம்:கணவன் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிச்சந்தை அருகே உள்ளது ஈத்தங்காடு. இப்பகுதியை சேர்ந்த ரமேஷ்(வயது45), உமா(34) என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இத்தம்பதிக்கு அஜித் என்ற மகனும், 9வயதில் காவ்யா என்ற மகளும் உள்ளனர். ஈத்தங்காடு பகுதியிலேயே பேக் கடை நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வந்தார் ரமேஷ். இந்நிலையில் உமாவின் நடத்தையின் மீது ரமேஷுக்கு சந்தேகம் வந்தது. இதனால் இருவருக்கு இடையேயும் பிரச்சனை ஆரம்பமானது. உமா மீது ரமேஷுக்கு சந்தேகம் வலுத்ததால்
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிச்சந்தை அருகே உள்ளது ஈத்தங்காடு. இப்பகுதியை சேர்ந்த ரமேஷ்(வயது45), உமா(34) என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இத்தம்பதிக்கு அஜித் என்ற மகனும், 9வயதில் காவ்யா என்ற மகளும் உள்ளனர். ஈத்தங்காடு பகுதியிலேயே பேக் கடை நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வந்தார் ரமேஷ்.

இந்நிலையில் உமாவின் நடத்தையின் மீது ரமேஷுக்கு சந்தேகம் வந்தது. இதனால் இருவருக்கு இடையேயும் பிரச்சனை ஆரம்பமானது. உமா மீது ரமேஷுக்கு சந்தேகம் வலுத்ததால் வீட்டில் பிரச்சனையும் அதிகமானது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தின் போதும் வாக்குவாதம் வலுத்ததால், ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து உமாவின் கழுத்தில் வெட்டியதால் அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இந்த அதிர்ச்சியில் ரமேஷ் தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உமாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உமாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.

உமா இறந்ததை அடுத்து ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளது போலீஸ்.