×

“மதுவை ஊற்றி ,மரத்தில் ஏற்றி..” -12 வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை .

தொழில் போட்டியால் மாமாவை பழிவாங்க, அவரின் 12 வயதான மைத்துனரை அடித்து தூக்கி வீசிய கொடூரம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேவ் என்பவருக்கு அவரின் தொழில் போட்டி காரணமாக சிலருடன் விரோதம் இருந்து வந்துள்ளது .அதன் காரணமாக அவரின் விரோதிகள் அவரை பழிதீர்க்க ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள் .அப்போது தேவுக்கு அவரின் மைத்துனர் 12 வயதான சிறுவன் அக்ஷ்ய் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதையறிந்தார்கள் .அதனால் அந்த அஷ்யயை அடித்தால் அவரின்
 


தொழில் போட்டியால் மாமாவை பழிவாங்க, அவரின் 12 வயதான மைத்துனரை அடித்து தூக்கி வீசிய கொடூரம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேவ் என்பவருக்கு அவரின் தொழில் போட்டி காரணமாக சிலருடன் விரோதம் இருந்து வந்துள்ளது .அதன் காரணமாக அவரின் விரோதிகள் அவரை பழிதீர்க்க ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள் .அப்போது தேவுக்கு அவரின் மைத்துனர் 12 வயதான சிறுவன் அக்ஷ்ய் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதையறிந்தார்கள் .அதனால் அந்த அஷ்யயை அடித்தால் அவரின் மாமாவுக்கு வலிக்கும் என்று கணக்கு போட்டார்கள் .
அதனால் கடந்த வாரம் அந்த 12 வயது சிறுவன் அக்சயயை ஒரு ஆட்டோவில் அந்த கூட்டம் கடத்தி சென்றது .அங்குள்ள தோப்புக்குள் கடத்தி சென்ற அவர்கள் அந்த சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்துள்ளார்கள் .மது மயக்கத்தில் கிடந்த அந்த சிறுவனை பலமாக அனைவரும் சேர்ந்து தாக்கியுள்ளார்கள் .அதன்பிறகு சிறுவனை குற்றுயிராக அங்குள்ள அந்த தோப்பில் தூக்கி வீசி விட்டு சென்றார்கள் .மறுநாள் தன்னுடைய மைத் துனரை காணாத தேவ் அவரை தேடி போன போது அவரின் காயம் பட்ட உடல் அங்குள்ள தோப்பில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார் .பின்னர் அந்த சிறுவனை மீட்டு சிகிச்சையளித்தார் .அதன் பின்னர் போலிஸில் புகாரளிக்கப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வெங்கடேஷ் என்பவரை முதலில் கைது செய்தார்கள் ,மேற்கொண்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைப்பெறுகிறது .