×

ஆடு மேய்த்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

 

திருத்துறைப்பூண்டி அருகே ஆடு மேய்த்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

திருத்துறைப்பூண்டி அருகே ஆடு மேய்த்த 11 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்ஸோ ஆக்ட் பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கும்மட்டிதிடல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் நேற்று ஆடு மேய்க்க சென்ற 11வயது சிறுமியிடம்  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் மணிகண்டன் தவறான முறையில் நடந்து கொண்டது குறித்து தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  தொடர்ந்து  போலீசார் போக்ஸோ ஆக்ட் பிரிவில் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.