×

’தர்பார்’ படத்தைப் பாதியில் நிறுத்தி அரசியலில் அதிரடி எண்ட்ரி கொடுக்கும் ரஜினி…

தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி இம்முறை உறுதியாக அறிவிப்பார். அப்போது நல்ல ஒரு முடிவு வரும். ரஜினியின் அடுத்தடுத்த அரசியல் அறிவிப்புகளைக் கேட்டு மக்கள் சலிப்பான மனநிலையில் உள்ள நிலையில் ‘வரும் 23 ம் தேதி முடிவுகள் வந்த பிறகு தனது உறுதியான முடிவை அறிவித்தே தீருவார்’ என்று அவரது அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். அவ்வப்போது ரஜினி மன்ற நிகழ்ச்சிகளுக்கு தலைகாட்டும் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா நேற்று திருச்சியில் தங்களது தாய் தந்தையருக்குக் கட்டப்பட்ட மணிமண்டபத்தின் 48
 

தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி இம்முறை உறுதியாக அறிவிப்பார். அப்போது நல்ல ஒரு முடிவு வரும்.

ரஜினியின் அடுத்தடுத்த அரசியல் அறிவிப்புகளைக் கேட்டு மக்கள் சலிப்பான மனநிலையில் உள்ள நிலையில் ‘வரும் 23 ம் தேதி முடிவுகள் வந்த பிறகு தனது  உறுதியான முடிவை அறிவித்தே தீருவார்’ என்று அவரது அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது ரஜினி மன்ற நிகழ்ச்சிகளுக்கு தலைகாட்டும் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா நேற்று திருச்சியில் தங்களது தாய் தந்தையருக்குக் கட்டப்பட்ட மணிமண்டபத்தின் 48 வது நாள் மண்டல பூஜையில் கலந்துகொண்டார்.திருச்சி ரசிகர் ஒருவர் ரஜினி, சத்யநாராயணா தாய் தந்தையர் கட்டிய மணி மண்டபத்தை ரஜினி இன்னும் எட்டிக்கூட  பார்க்காத நிலையில் சத்யநாராயணா,இங்கு இரண்டாவது முறையாக வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டல பூஜை நிகழ்ச்சி முடிந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சத்தியநாராயணா,’சாதுக்கள், சந்நியாசிகள்,பக்தர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் மழை நன்றாகப் பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கப்பட்டுள்ளது.ரஜினி தற்போது படப்பிடிப்பில் பிசியாக உள்ளதால் இந்த மணி மண்டபத்திற்கு வரமுடியைல்லை.இன்னொரு நாள் நிச்சயம் வருவார்.

தமிழக தேர்தல் முடிந்தவுடன் தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி இம்முறை உறுதியாக அறிவிப்பார். அப்போது நல்ல ஒரு முடிவு வரும். தமிழக மக்களுக்காக தனது மனதில் நல்ல நல்ல திட்டங்களை அவர் வைத்திருக்கிறார். இவ்வளவு நாள் அரசியலுக்கு வராமல் தாமதித்ததும் கூட ஒரு வகையில் நல்லது என்றுதான் இப்போது தோன்றுகிறது’ என்றார் சத்யநாராயணா.

ரஜினியின் இந்த 23ம் தேதி அறிவிப்பால் ‘தர்பார்’ படத்தைப் பாதியில் விட்டு விட்டு ரஜினி முழுநேர அரசியலில் நம் கதி என்னாவது என்று கலங்கிப்போயுள்ளதாம் படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம்.