‘வெட்கப்படாமல் மாதவிடாயை ஏற்றுக்கொள்ளுங்கள்’ : கமல் ஹாசன் வலியுறுத்தல்!
கமல் ஹாசன் கல்லூரிகளுக்குச் சென்று மாணவ மாணவிகள் மத்தியில் பேசியும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
சென்னை: பூப்பெய்தும் விழா நடத்தும் இந்த சமூகம் வெட்கப்படாமல் மாதவிடாயையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல் ஹாசன் கல்லூரிகளுக்குச் சென்று மாணவ மாணவிகள் மத்தியில் பேசியும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை ரஷ்யன் கலாச்சார மையத்தில், #NoMoreKarai எனும் விழிப்புணர்வு இயக்கத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘குழந்தை பால் குடித்த பிறகு வாயை துடைத்துவிடும் தாய்மை குணமே மாதவிடாய் காலத்திலும் இருக்கவேண்டும். பூப்பெய்தும் விழா நடத்தும் இந்த சமூகத்தில், வெட்கப்படாமல் மாதவிடாயையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ஆடையில்லாமல் மனிதர்களே சாப்பிட்டு வாழ்ந்து வந்த இந்த சமூகம் மாறியுள்ளது. ஆகவே இன்னும் மாறும் என்று நம்புவோம்’ என்று கூறினார்.