×

‘புதுப்பேட்டை 2’? ‘ஆயிரத்தில் ஒருவன் 2’?: செல்வராகவனின் நீண்ட நாள் தாகம் இது!

சென்னை: ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க விரும்புவதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. கேங்க்ஸ்டர் ரவுடீசத்தை வித்தியாசமாக கூறியிருக்கும் இப்படத்திற்கு என வெறித்தனமாக ரசிகர்களும் உண்டு. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என தீவிரமாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ‘புதுப்பேட்டை 2’ படத்திற்கு பதில் தனது இயக்கத்தில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தனது நீண்ட நாள்
 

சென்னை: ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க விரும்புவதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. கேங்க்ஸ்டர் ரவுடீசத்தை வித்தியாசமாக கூறியிருக்கும் இப்படத்திற்கு என வெறித்தனமாக ரசிகர்களும் உண்டு. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என தீவிரமாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ‘புதுப்பேட்டை 2’ படத்திற்கு பதில் தனது இயக்கத்தில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தனது நீண்ட நாள் தாகம் என செல்வராகவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள்புதுப்பேட்டை 2எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசைஆயிரத்தில் ஒருவன் 2எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்என்று தெரிவித்துள்ளார்.

தற்போது சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் ‘என்.ஜி.கே’ படத்தை தொடர்ந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இயக்குவாரா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.