×

‘நான்தான்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு’ : சும்மா கிழிக்கும் தர்பாரின் முதல் சிங்கிள் டிராக் !

மரணம் மாஸு மரணம் பாடலை முழுவதுமாகவே எஸ்பிபி பாடியிருக்கலாம் என்று அவரது ரசிகர்கள் ஆதங்கப்பட்ட நிலையில் இந்த பாடலானது அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில் அமைந்துள்ளது இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே தர்பார்
 

மரணம் மாஸு  மரணம் பாடலை முழுவதுமாகவே   எஸ்பிபி  பாடியிருக்கலாம்  என்று அவரது ரசிகர்கள் ஆதங்கப்பட்ட நிலையில் இந்த பாடலானது அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில் அமைந்துள்ளது

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே தர்பார் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அந்த வரிசையில்  மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேசமயம்  நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் பணிகளையும் முடித்து விட்டார். வரும் டிச.12ம் தேதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு தர்பாரின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சும்மா சுழி எனத் தொடங்கும் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. வழக்கமாக ரஜினிகாந்த் படங்களில் ஓப்பனிங் பாடலை  எஸ்பிபி பாடினால் அப்படம் ஹிட் அடிக்கும் என்ற செண்டிமெண்ட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

 

அந்த வகையில்  தர்பார் படத்திலும் ரஜினியின் மாஸ் ஓப்பனிங் சாங்கை  எஸ்பிபி  அசத்தியுள்ளார். முன்னதாக பேட்ட படத்தில் மரணம் மாஸு  மரணம் பாடலை முழுவதுமாகவே   எஸ்பிபி  பாடியிருக்கலாம்  என்று அவரது ரசிகர்கள் ஆதங்கப்பட்ட நிலையில் இந்த பாடலானது அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.