×

‘நடிகர் விஷாலிடம் கால்ஷீட் வாங்கியுள்ளேன்’.. 47 லட்சம் ரூபாய் மோசடி செய்த இயக்குநர் வடிவுடையான் கைது!

சன்னி லியோனி நடித்து வரும் வீரமாதேவி படத்தை இயக்கி வருபவர் இயக்குநர் வடிவுடையான். இவர் தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியிருக்கிறார். சன்னி லியோனி நடித்து வரும் வீரமாதேவி படத்தை இயக்கி வருபவர் இயக்குநர் வடிவுடையான். இவர் தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியிருக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இவர் பணமோசடி செய்ததாகச் சென்னை விருகம் பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் நரேஷ் கோத்தாரி
 

சன்னி லியோனி நடித்து வரும் வீரமாதேவி படத்தை இயக்கி வருபவர் இயக்குநர் வடிவுடையான். இவர் தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியிருக்கிறார்.

சன்னி லியோனி நடித்து வரும் வீரமாதேவி படத்தை இயக்கி வருபவர் இயக்குநர் வடிவுடையான். இவர் தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியிருக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இவர் பணமோசடி செய்ததாகச் சென்னை விருகம் பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் நரேஷ் கோத்தாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் விஷாலை வைத்துத் தான் படம் இயக்க உள்ளதாகக் கூறி பொய்யான ஆவணங்களைக் காட்டி ரூ.47 லட்சம் மோசடி செய்து விட்டதாகத் தெரிவித்திருந்தார். 

ஆனால் தான் பணமோசடி செய்யவில்லை என்றும் நரேஷ் கோத்தாரி என்று எனக்கு யாரையும் தெரியாது, நான் பணம் வாங்கவில்லை என்று இயக்குநர் வடிவுடையான் தெரிவித்தார். மேலும், 3 ஆண்டுகளுக்கு முன்னர் அசோக் லோதா என்பவரிடம் தான் வாங்கிய கடனுக்காக நிரப்பப்படாத காசோலை, பத்திரம் கொடுத்தேன் என்றும் பணத்தைத் திருப்பி கொடுத்த பின்னர் அவர் அதைக் கொடுக்காததால் நான் அவர் மீது வழக்குப் பதிவு செய்தேன்.. இப்போது அசோக் லோதாவின் தூண்டுதல் படி தான் நரேஷ் கோத்தாரி புகார் கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில், நேரேஷ் கோத்தாரி கொடுத்த புகாரின் பேரில் இயக்குநர் வடிவுடையான் விருகம் பாக்கம் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார். அவரிடம் போலீசார் அந்த பணம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.