‘தலைவனுடன் ஆட்டம் ஆரம்பம்’ வைரலாகும் சிம்பு மற்றும் சாண்டி மாஸ்டர் லேட்டஸ்ட் போட்டோ!
பிக் பாஸ் சீசன் 3 பெரிதும் பேசப்பட்டதற்குப் போட்டியாளர்கள் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் வெற்றிகரமாக முடிந்து முகின் பிக் பாஸ் டைட்டிலை வென்றார். பிக் பாஸ் சீசன் 3 பெரிதும் பேசப்பட்டதற்குப் போட்டியாளர்கள் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக சாண்டி பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை மட்டுமல்ல மக்களையும் கவர்ந்தவராக மாறிவிட்டார். ஒருமுறை மகத் யாஷிகா வருகையின் போது மகத், சிம்பு எல்லாரையும் கேட்டேன்னு சொல்ல சொன்னாரு என்று கூறிவிட்டு சாண்டி உன்கிட்ட தான் முக்கியமா சொல்ல சொன்னாரு என்று கூறினார்.
இதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும், சாண்டி சிம்புவை நேரில் சந்தித்தார்.
இந்நிலையில் சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் கலையரசன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் தலைவனுடன் ஆட்டம் ஆரம்பம் என்று குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்க்குகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.