‘சுயமா சிந்திக்க தெரிஞ்சவன் தான் சூப்பர் ஹீரோ’ : மிரட்டும் சிவகார்த்தியின் ‘ஹீரோ’ டிரைலர்!
மாணவர்களின் கனவுகள் மற்றும் சுயசிந்தனை எப்படி ஒடுக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது இந்த ஹீரோ டிரைலர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு, ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் லான்ச் சத்யம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், இயக்குநர் பி.எஸ். மித்ரன்,பா. விஜய் மற்றும் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இதை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு டிரைலரானது இணையத்தில் வெளியானது. அதில், சிவகார்த்தி கல்யாணி பிரியதர்ஷினியுடன் காதல், போலி சான்றிதழ் அச்சடிக்கும் திருட்டு நபராக வருகிறார். பின்னர் அர்ஜுனின் ஆலோசனைப்படி நல்லவராக மாறுவதும் போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. நான் படிப்பை வைத்து வியாபாரம் செய்பவன் அல்ல; படித்தவனை வைத்து வியாபாரம் செய்பவன், சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ என்றும் சிவகார்த்தி சொல்லும் பஞ்ச் வசனங்கள் தெறிக்கவிடுகின்றன. கல்வி என்ற பெயரில் நாடாகும் வியாபாரம், ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் சுயசிந்தனை எப்படி ஒடுக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது இந்த ஹீரோ டிரைலர்.