‘சுயசிந்தனை இல்லாதவர்; அனுதாபத்திற்காக நடிப்பவர்’ : தர்ஷன் தேர்வு செய்த ஹவுஸ்மேட்ஸ் இவர்கள்தான்!
சுயசிந்தனையும், தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள்
பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது. முதல் கட்டமாக நடந்த இரண்டு டாஸ்க்குகளில் தனி நபராக தர்ஷனும், இரண்டாவது டாஸ்கில் குழுவாக தர்ஷன், ஷெரின், கவின் ஆகிய மூவரும் வென்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், சுயசிந்தனையும், தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள் என்ற வாசகத்திற்குக் கவின் மற்றும் லாஸ்லியாவை குறிப்பிடும் தர்ஷன், அடுத்ததாக மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என்பதற்குக் கவின் மற்றும் சேரன் பெயரை சொல்கிறார். அதற்குச் சேரன் இதற்கு விளக்கம் கேட்கலாமா குருநாதா என்று கூற அதற்கு அதற்கு தர்ஷன் சிரிக்கிறார். உடனே சேரன் இல்லை கேட்கலாம். அனுதாப அலைகள்ன்னு சொன்னா எதுக்குன்னு கேட்கணும்ல’ என்று கூறி சிரிக்கிறார்.
இந்த புரொமோவை பார்க்கும் போது கண்டிப்பாக இன்று பிக் பாஸ் வீட்டில் சில மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தெளிவாகிறது.