×

‘சிலருடன் தொடர்புப்படுத்தி பேசி திருமணத்தை நிறுத்திவிட்டார்…’ தர்ஷன் பற்றிய உண்மைகளை ஆதாரத்துடன் வெளியிட்ட சனம் ஷெட்டி

பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ‘எனக்கும் தர்ஷனுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இறுதிப் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் மாடல் அழகியும் தர்ஷனின் காதலியுமான சனம் ஷெட்டி தர்ஷன் மீது சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ‘எனக்கும் தர்ஷனுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம்
 

பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ‘எனக்கும் தர்ஷனுக்கும்  கடந்த ஆண்டு  மே மாதம்  நிச்சயதார்த்தம் நடந்தது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்  தர்ஷன். இறுதிப் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

இந்நிலையில் மாடல் அழகியும்  தர்ஷனின் காதலியுமான  சனம் ஷெட்டி தர்ஷன் மீது சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ‘எனக்கும் தர்ஷனுக்கும்  கடந்த ஆண்டு  மே மாதம்  நிச்சயதார்த்தம் நடந்தது.

 ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க  இருந்தது. ஆனால்  என்னை சில நடிகர்களுடன் தொடர்புப்படுத்திப் பேசி தர்ஷன் திருமணத்தை நிறுத்தினார். 

இதனால் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. எனது குடும்பமே மன உளைச்சலுக்குள்ளானது.  ஏன்  திருமணத்தை நிறுத்தினாய் என்று கேட்டதற்கு என் வழியில் வராதே…இல்லையென்றால் என் ரசிகர்கள் உன்னை தவறாகச் சித்தரிப்பார்கள்  என்று மிரட்டினார்.  அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது, அவருக்கு கிடைத்த புகழ் எல்லாவற்றிலும் எனக்கும் பங்கு உள்ளது. அவருக்காக நான் 15 லட்சம் வரை செலவு செய்தேன்.

 நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது  தர்ஷன் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.