×

‘கணவருக்கு வேலை இல்லாமல் வறுமையில் குடும்பம்…’ தனி ஆளாக போராடிய அறந்தாங்கி நிஷா

சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்துள்ள அவர் குழந்தையின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டான்ட் அப் காமெடியனாக கலக்கியவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் வலம்வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு ரியாஸ் என்ற கணவரும் ஒரு மகனும் இருக்கும் நிலையில் நிஷாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்துள்ள
 

சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்துள்ள அவர் குழந்தையின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டான்ட் அப் காமெடியனாக கலக்கியவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

 

இவருக்கு ரியாஸ் என்ற கணவரும் ஒரு மகனும்  இருக்கும் நிலையில் நிஷாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்துள்ள அவர் குழந்தையின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.  

 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அறந்தாங்கி  நிஷா மற்றும் அவரது கணவர் இருவரும் வாழ்க்கையில்  தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளனர். அதில், ‘நாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டோம்.  எனக்கு முதல் குழந்தை பிறந்த போது என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் இந்தியாவிற்குத் திரும்பினார். எனக்கு குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தது.

இதனால் உடனடியாக என் கணவரை நான் ஊருக்குத் திரும்ப சொன்னேன். சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் ஒரு வருஷம்  வேலை இல்லாமல் இருந்தால் இருந்தார் அதனால் நான் பட்டிமன்றங்களுக்குச் சென்று அதில் வரும் காசை குடும்பத்திற்காகச் செலவழித்து வந்தேன்.  அதில்தான் நாங்கள் சாப்பிட்டோம். நான் அப்போது வாங்கிய 2000, 2500 ரூபாய்தான் என் குடும்பத்தை அப்போது காப்பாற்றியது. ஒரு வருடத்திற்கு பின்னர் தான் என்  கணவருக்கு வேலை கிடைத்தது’ என்று கூறியுள்ளார்.