×

‘எனக்கு செய்யவேண்டியத இப்போ மகாலட்சுமிக்கு செய்யுறாரு…அவளுக்கு அரசியல் ஆதரவும் இருக்கு’ : நடிகை ஜெயஸ்ரீ பரபரப்பு புகார்!

என் மனைவிக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும் தான் தொடர்பு என்று கூறி அதிர்ச்சியை கிளப்பினார். சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ தனக்கு கணவருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் கள்ள உறவு இருப்பதாகக் கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும் விவாகரத்து கேட்டு கணவன் துன்புறுத்துவதாகப் போலீசில் புகார் கொடுக்க ஈஸ்வர் மற்றும் அவரது தாய் 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து ஜாமீனில் விடுவித்து உள்ளனர். இந்த குற்றச்சாட்டை ஈஸ்வரும் மகாலட்சுமியும்
 

என் மனைவிக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும் தான் தொடர்பு என்று கூறி அதிர்ச்சியை   கிளப்பினார்.

சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ தனக்கு கணவருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் கள்ள உறவு இருப்பதாகக் கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும் விவாகரத்து கேட்டு கணவன் துன்புறுத்துவதாகப் போலீசில் புகார் கொடுக்க ஈஸ்வர் மற்றும் அவரது தாய்  7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து ஜாமீனில் விடுவித்து உள்ளனர்.  

இந்த குற்றச்சாட்டை ஈஸ்வரும் மகாலட்சுமியும் மறுத்த நிலையில் பணம் பிடுங்குவதற்காக இப்படி நாடகம் நடத்துவதாக கூறினர். குறிப்பாக நடிகர் ஈஸ்வர் எனக்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பில்லை. என் மனைவிக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும் தான் தொடர்பு என்று கூறி அதிர்ச்சியை   கிளப்பினார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த  ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ,  முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் எங்கள் குடும்ப நண்பர். என் அம்மா ஒரு நடிகை. நான் பரமப்பரிய குடும்பத்திலிருந்து வந்தவள். நான் ஏன்  இவர்களின் பணத்திற்கு ஆசைப்பட போகிறேன். இதுவரை ஈஸ்வருக்கு 15 சீரியல்களுக்கு மேல் வாய்ப்பு வாங்கி தந்துள்ளேன். அத்தோடு,47 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளேன்’ என்றார். 

 தொடர்ந்து பேசிய அவர், நான் அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். எல்லா பிரச்சனைக்கும் காரணம்  மகாலட்சுமி தான். எனக்கும் என் மகளுக்கும் செய்யவேண்டியவற்றை  இப்போது அவளுக்கும் அவளின் மகனுக்கும் செய்து கொண்டிருக்கிறார் ஈஸ்வர். மகாலட்சுமிக்கு அரசியல் ஆதரவு உள்ளது. நேற்றிரவு எனக்கு போனில் கொலை மிரட்டல் வந்தது. இதனால் இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகப்போகிறேன்’ என்றார்.