×

‘உங்கள் தம்பிமார்கள் வரும்போது நீங்கள் அவர்களுக்கு வழிவிட வேண்டும்’ : எஸ்.ஏ.சி-யின் பரபரப்பு பேச்சு!

நடிகர்கள் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது? எம்ஜிஆர், கருணாநிதி, என்டிஆர் இவர்கள் அனைவரும் சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான். நடிகர் கமல் ஹாசனின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக உங்கள் நான் என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நேற்று மாலை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அப்போது நிகழ்ச்சியில் பேசிய விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர்கள் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது? எம்ஜிஆர்,
 

நடிகர்கள் அரசியலுக்கு ஏன்  வரக்கூடாது? எம்ஜிஆர், கருணாநிதி, என்டிஆர் இவர்கள்  அனைவரும் சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான்.

நடிகர் கமல் ஹாசனின்  திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக உங்கள் நான் என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நேற்று மாலை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் ரஞ்சித்  உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும்  கலந்து கொண்டார்கள். 

அப்போது  நிகழ்ச்சியில் பேசிய விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர்கள் அரசியலுக்கு ஏன்  வரக்கூடாது? எம்ஜிஆர், கருணாநிதி, என்டிஆர் இவர்கள்  அனைவரும் சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான். கமல் துணிச்சலாக அரசியலுக்கு வந்துவிட்டார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று ஏற்கனவே நான்  கூறியிருந்தேன். ஏமாற்றிவிடாதீர்கள். ரஜினியும் கமலும்  இணைந்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டின் தண்ணீரைக் குடித்தாலே தமிழன்தான்.’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆள்பவர்கள் புதிதாக வருபவர்களுக்கு வழிவிடவேண்டும். அராஜகம் இல்லாத ஊழல் இல்லாத ஆட்சியை தரவேண்டும்.  உங்கள் பின்னாடி நாங்கள் இருக்கிறோம். அதே போல் உங்கள் தம்பிமார்கள் வரும்போது நீங்கள் அவர்களுக்கு வழிவிட வேண்டும்’ என்றார்.