×

‘உங்களை பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன்’: சீயான் விக்ரம் குறித்து துருவ் பதிவு!

துருவ் விக்ரம் தனது அப்பா சீயான் விக்ரம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை: துருவ் விக்ரம் தனது அப்பா சீயான் விக்ரம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின், தமிழ் ரீமேக்கான ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரி கொடுக்கிறார் துருவ் விக்ரம். அப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை பார்த்த பிறகு பலரும் துருவ் விக்ரமின் நடிப்புக்குக் குறித்து பாராட்டு தெரிவித்தார்கள்.
 

துருவ் விக்ரம் தனது அப்பா சீயான் விக்ரம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சென்னை: துருவ் விக்ரம் தனது அப்பா சீயான் விக்ரம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின், தமிழ் ரீமேக்கான ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரி கொடுக்கிறார் துருவ் விக்ரம். அப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை பார்த்த பிறகு பலரும் துருவ் விக்ரமின் நடிப்புக்குக் குறித்து பாராட்டு தெரிவித்தார்கள். இந்த படத்தின் சீயான் விக்ரம் தனது மகன் துருவிற்காகப் படப்பிடிப்பு தளத்தில் 50 நாட்கள் கூடவே இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் துருவ் தனது அப்பா விக்ரம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அப்பா நீங்கள் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிற்கு வந்ததற்கு, விட்டுக்கொடுக்காமல் இருந்ததற்கு, லட்சியத்தை உயிர்ப்புடன் வைத்திருந்ததற்கு, எதிர்காலத்தைப் பற்றி எப்போதும் தெளிவாக இருந்ததற்கு, நான் நம்பிக்கை இழப்பதை அனுமதிக்காமல் இருந்ததற்கு, எனக்காக ‘ஆதித்யா வர்மா’வை உருவாக்கியதற்கு,  எப்போதும் எனக்கு ஆதரவு தந்ததற்கு, உங்களுக்குத் தெரிந்த அத்தனையையும் தொடர்ந்து எனக்குக் கற்றுத் தந்ததற்கு…. நீங்களின்றி இது எதுவும் சாத்தியப்பட்டிருக்காது. இந்த படத்திற்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்தீர்கள் என்பதைத் தெரிந்த ஒருவர், டீஸரில் உங்கள் பெயர் எங்கே என்று கேட்டார். 

அதற்கு நான் என் பெயருக்குப் பின்னாலும், நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் இருக்கிறது என்றேன். தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா. உங்களைப் பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.