×

‘ஆபாச படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டுகிறார்’: காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த நிலானி!

நடிகை நிலானி தன்னை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டுகிறார் என்று காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். சென்னை: நடிகை நிலானி தன்னை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டுகிறார் என்று காவல் நிலையத்தில் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகை நிலானி சின்னதிரை சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர். இவரும் காந்தி லலித் குமார் என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு நிலானி தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டதை
 

நடிகை நிலானி தன்னை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டுகிறார் என்று காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

சென்னை: நடிகை நிலானி தன்னை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டுகிறார் என்று காவல் நிலையத்தில் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

நடிகை நிலானி சின்னதிரை சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர். இவரும் காந்தி லலித் குமார் என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு நிலானி தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டார். 

பின்னர் சிறிது காலமாக ஆள், இடம் தெரியாமல் இருந்து வந்த நிலானி மீண்டும் பாலியல் சர்ச்சை குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘கடந்த ஆண்டு என்னைப் பற்றி பரபரப்பான செய்திகள் வெளிவந்த நேரத்தில் எனது செல்போன் எண்களும் வெளியானது. அப்போது பலர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினர். ஒரு சிலர் ஆபாசமாகவும் பேசினர்.

அப்போது வெளிநாட்டிலிருந்து பேசுவதாகக் கூறி மஞ்சுநாதன் என்பவர் என்னிடம் பேசினார். எனக்கு திருமணம் நடக்க வில்லை என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆறுதலாகக் கூறினார். அடிக்கடி போனில் பேசினோம்.

நேரிலும் சந்தித்தோம். பின்பு திருமணத்திற்கு நானும் சம்மதித்தேன். ஆனால் பழகிய பிறகு தான் அவருக்கு திருமணம் நடந்து மனைவி இருக்கிறார் என்பது எனக்கு தெரிய வந்தது. உடனே அவரை விட்டு விளக்கினேன்.  

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஒரு நாள் திடீரென்று உன்னை நான்  ஆபாசமாகப் படம் எடுத்து வைத்துள்ளேன், நான் சொல்வது போல் கேட்காவிட்டால் உனது ஆபாசப் படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டல் விடுகிறார். போனில் பேசும் போது எனது விருப்பத்திற்கு மாறாக ஆபாசமாகப் பேசுகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் என்னை மிரட்டும் மஞ்சுநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.