×

‘அரசாங்கத்தையே அலறவைப்பவர்கள் நாங்கள்’ : நடிகர் விஜய்யின் தந்தை மீது பணமோசடி புகார்!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்த திரைப்படம் டிராபிக் ராமசாமி. இப்படத்தின் வெளியான நிலையில், படத்தின் தமிழ்நாட்டு ஒளிபரப்பு உரிமத்தை 3 கோடி ரூபாய்க்கு தருவதாகக் கூறி கனடாவில் வசித்து வரும் பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவரிடம் ஒப்பந்தம் போட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர் .
 

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்த திரைப்படம் டிராபிக் ராமசாமி. இப்படத்தின்  வெளியான நிலையில்,  படத்தின் தமிழ்நாட்டு ஒளிபரப்பு உரிமத்தை 3 கோடி ரூபாய்க்கு தருவதாகக் கூறி கனடாவில் வசித்து வரும் பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவரிடம் ஒப்பந்தம் போட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர் . மேலும் முன்பணமாக 21 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால்  சில நாட்களுக்குப் பிறகு தானே படத்தை வெளியிட இருப்பதாகக் கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், பணத்தைத் தராமல் அலைக்கழித்துள்ளார். இதனால் பிரம்மானந்தம் சுப்பிரமணியன்  சார்பில் தயாரிப்பாளர் மணிமாறன் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து கூறியுள்ள  மணிமாறன், எஸ்.ஏ சந்திரசேகரிடம் பணத்தை திருப்பி கேட்டால் அலைக்கழிப்பதுடன் என் நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அரசாங்கத்தையே அலறவைப்பவர்கள் நாங்கள் என உனக்கு தெரியாதா? என்று கேட்டு  பயமுறுத்தி வருகிறார் ‘என்றார். இந்த புகார் மீது விரைவில் விசாரணை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.