வீட்டில் இருந்த யானை தந்தங்கள் : கைதாகும் நடிகர் மோகன் லால்?!
நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்த தந்தங்கள் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளா : நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்த தந்தங்கள் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொச்சியில் உள்ள மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது மோகன்லால் வீட்டிலிருந்து நான்கு யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மோகன் லால் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. யானை தந்தங்களைத் திருப்பிக் கேட்டு, அப்போதைய வனத்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை விடுத்தார். அரசு சட்டத் திருத்தங்கள் மேற்கொண்டு யானை தந்தத்தை திரும்பவும் மோகன்லாலிடமே வழங்கியது.
இதை எதிர்த்து ஏலூரைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் என் இந்த வழக்கை முடிக்காமல் உள்ளீர்கள் என்றும் சட்டத் திருத்தம் செய்து மோகன்லாலுக்கு யானை தந்தம் வழங்கியிருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு வனத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், மோகன்லால், ஒல்லூர் கிருஷ்ணகுமார், திருபுனித்துரா ராதாகிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்த நளினி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கில் மோகன் லால் கைதாவாரா என்பது விரைவில் தெரியவரும்.