×

விஷால் மீது மீ டூ புகார் கூறிய பெண் மீது வழக்குப்பதிவு

நடிகர் விஷால் மீது மீ டூ புகார் தெரிவித்த விஸ்வதர்ஷினி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: நடிகர் விஷால் மீது மீ டூ புகார் தெரிவித்த விஸ்வதர்ஷினி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் தனது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் நடிகர் விஷாலுக்கு தவறான தொடர்பு இருப்பதாக விஸ்வதர்ஷினி என்ற பெண் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மீ டூ இயக்கத்தின் கீழ்
 

நடிகர் விஷால் மீது மீ டூ புகார் தெரிவித்த விஸ்வதர்ஷினி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: நடிகர் விஷால் மீது மீ டூ புகார் தெரிவித்த விஸ்வதர்ஷினி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் தனது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் நடிகர் விஷாலுக்கு தவறான தொடர்பு இருப்பதாக விஸ்வதர்ஷினி என்ற பெண் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீ டூ இயக்கத்தின் கீழ் விஷால் மீது புகார் தெரிவித்து விஸ்வதர்ஷினி, 16 வயது சிறுமி குறித்தும் பேசியிருந்தார். இதையடுத்து, தன்னை பற்றி அவதூறாக பேசிய விஸ்வதர்ஷினி மீது தேசிய குழந்தைகள் ஆணையத்தில் சிறுமி புகார் தெரிவித்திருந்தார்.

சிறுமியின் புகாரை ஏற்ற குழந்தைகள் ஆணையம் விஸ்வதர்ஷினி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் ராயப்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.