×

விவாகரத்து குறித்து முதல் முறையாக வாய் திறந்த விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தான் மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன் என்பது பற்றி முதல் முறையாக வாய் திறந்துள்ளார். சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தான் மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன் என்பது பற்றி முதல் முறையாக வாய் திறந்துள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் தான் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.
 

நடிகர் விஷ்ணு விஷால் தான் மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன் என்பது பற்றி முதல் முறையாக வாய் திறந்துள்ளார். 

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தான் மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன் என்பது பற்றி முதல் முறையாக வாய் திறந்துள்ளார். 

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் தான் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. 

அதைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி தனது கல்லூரி தோழி ரஜினி என்ற பெண்ணை திருமணம்  கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் இருக்கிறான். 

இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு விவாகரத்து கிடைத்துவிட்டதாக விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு இறுதியில் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால்,விவகாரத்திற்கான காரணத்தைச் சொல்லாமல் மௌனம் காத்து வந்த விஸ்ணு விஷால் தற்போது முதல் முறையாக வாய் திறந்து கூறியுள்ளார். அதில்’ நான் என்னுடைய வாழ்க்கையில் உணர்ந்த விஷயம் என்ன வென்றால் எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போதும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். நான் மிகவும் உறுதியாக இருந்த விஷயம் எனது திருமணம். ஆனால் அதுவும் இப்போது இல்லை.

விவாகரத்தினால் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்கள் பல காலம் என்னுள் இருக்கும். துவக்கத்தில் நான் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தேன். ஆனால் அப்படி இருந்தால் சினிமாவில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்து அனைவரிடமும் சகஜமாகப் பழகினேன். படத்தில் காதல் காட்சிகள் சிறப்பாக இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சக நடிகைகளுடன் சகஜமாகப் பழகினேன். அப்போது தான் இந்தப் பிரச்சினை ஆரம்பமானது. நீ முன்பு இருந்தது போல் இல்லை மாறிவிட்டாய் என்ற பேச்சில் ஆரம்பித்து. 

பின்பு நான் காதலித்த நபர் நீ இல்லை எனும் அளவுக்குச் சென்றது விட்டது. இப்போதும் எனது மனைவியையும், மகனையும் உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன். அவரும் என்னைப் புரிந்து கொள்வார். அவர் மிகவும் நல்லவர். எனது மனைவிக்கு நான் எப்படிப்பட்டவன் என்பது நன்றாகத் தெரியும்’ என்று கூறியுள்ளார்.