விவசாயத்தை நாசமாக்கிய மீரா மிதுன்! நிலத்தில் இறங்கி நாற்று நட்டதால் விபரீதம்!!
பிக்பாஸில் சர்ச்சை நாயகியாக வலம்வந்த மீரா மிதுன் வயலில் இறங்கி நாற்று நடும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக்பாஸில் சர்ச்சை நாயகியாக வலம்வந்த மீரா மிதுன் வயலில் இறங்கி நாற்று நடும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இயக்குநர் சேரன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து வெளியே வந்த அவர், பிக்பாஸ் வீட்டில் தன்னை பலர் காதலித்தாக பரபரப்பு வீடியோவை வெளியிட்டார். இந்நிலையில் பிக்பாஸில் சக போட்டியாளரான சரவணன் அவரது அப்பாவிற்காக கோவில் ஒன்றை கட்டியுள்ளார். இதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்காடு கிராமத்திற்கு சென்ற மீராமிதுன் அங்கு வயலில் இறங்கி நாற்றுநடும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “மாநிலத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஐந்து நூற்றாண்டுகளுக்கு பிறகு சட்டசபையில் தமிழ்நாடு என்ற பெயரை முதலமைச்சர் பழனிசாமி முதல்முறையாக அறிவித்துள்ளார். உண்மையில் இது வரவேற்க வேண்டிய விஷயம்” எனக்கூறி தமிழ்நாடு நாளுக்காக விவசாயிகளும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.