விரைவில் பாலிவுட் செல்லும் தல அஜித் !? ; உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!
நடிகர் அஜித் விரைவில் பாலிவுட்டில் நடிப்பார் என்று நம்பிக்கை உள்ளதாக நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
மும்பை: நடிகர் அஜித் விரைவில் பாலிவுட்டில் நடிப்பார் என்று நம்பிக்கை உள்ளதாக நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை
பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சான், டாப்ஸி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் வினோத் இயக்கம் இப்படத்தில், அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் இவருடன், நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தைத் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது.
விரைவில் இந்தியில் அஜித்
இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ நேர்கொண்ட பார்வை படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜித் நடிப்பில் அசத்தியுள்ளார். விரைவில் இந்தியில் படம் நடிக்க அஜித் விருப்பம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். அப்படியானால் என்னிடம் 3 ஆக்ஷன் கதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
கோலிவுட்டில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜித் விரைவில் பாலிவுட் செல்வார். அங்கேயும் அவருக்குத் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகும். ஆனாலும் அவர் எங்க தல தான் என்று அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்க: சென்னை ரசிகர்களுக்கும், உங்களுக்கும் இடையேயான உறவு எத்தகையது? தல தோனியின் நெகிழ்ச்சியான பதில்!