×

விருது விழாவில் கண்ணீர் வடித்த நடிகை தீபிகா படுகோன் – வைரல் வீடியோ

மும்பையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் தன் கணவரின் பேச்சைக் கேட்டு நடிகை தீபிகா படுகோன் ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார். மும்பை: மும்பையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் தன் கணவரின் பேச்சைக் கேட்டு நடிகை தீபிகா படுகோன் ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார். நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் திருமணம், கடந்த மாதம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. மும்பையில் 2 மற்றும் பெங்களூரில் ஒன்று என 3 திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
 

மும்பையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் தன் கணவரின் பேச்சைக் கேட்டு நடிகை தீபிகா படுகோன் ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.

மும்பை: மும்பையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் தன் கணவரின் பேச்சைக் கேட்டு நடிகை தீபிகா படுகோன் ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.

நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் திருமணம், கடந்த மாதம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. மும்பையில் 2 மற்றும் பெங்களூரில் ஒன்று என 3 திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இவர்களின் திருமணத்தில் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற விருது விழா ஒன்றில் தீபிகா – ரன்வீர் ஜோடி கலந்து கொண்டனர். அந்த விழாவில், ‘பத்மாவத்’ திரைப்படத்திற்காக ரன்வீர் சிங்கிற்கு விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை பெற்றுக் கொண்ட ரன்வீர், “படத்தில் எனக்கு ராணி கிடைக்கவில்லை, ஆனால் நிஜ வாழ்க்கையில் கிடைத்துவிட்டது” என கூறி தன் மனைவியை பற்றி உருக்கமாகப் பேசினார்.

ஒரு கட்டத்தில், உணர்ச்சி பெருக்கில் கண் கலங்கிய தீபிகா, சிரித்துக் கொண்டே தன் கண்களில் வடிந்த கண்ணீரை ஒதுக்கினார். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.